விழி கிடைக்குமா? அபய கரம் கிடைக்குமா?

During my recent trip to Adishtanam, there were two small girls who sang this song so beautifully along with her mother. They were visiting from Dubai/Muscat. It was early in the morning there with no crowd at all and it was so peaceful – just 3 of them and myself in the adishtanam –  to listen to those sweet voices and these great lines. It melted my heart….. Unfortunately, I couldn’t video record them. I found this video online and thought of sharing this with you all. I am sure you all know this song and must have heard too….

Adhistanam_Sandhana_Kappu

விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ?
குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?….விழி…

அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?…விழி..

நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க
சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா?
நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தால்
விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?…விழி..

கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன்,
குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத இன்பம் பல எனைவந்து சேரும்போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா



Categories: Periyava TV

Tags:

17 replies

  1. ராதே க்ருஷ்ணா

    படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. கண்கள் பனிக்கிறது. அம்பாள் க்ருபையா? அந்த சிவாசார்யார்களின் பக்தியா? நிச்சயமாக அந்த சிவாசார்யார்களின் பக்திக்கு மனம் இறங்கிய அம்பாள், 48 ஆண்டுகள் தன் பொலிவு மாறாமல் செய்த தவம் இது.

    எல்லாம் அவள் மகிமை

    ராதே க்ருஷ்ணா

  2. எப்படிப்பட்ட நிகழ்வு! இதைப் படிக்க மெய் சிலிர்க்கிறது!! தகவல் கொடுத்த அன்பர் விஎஸ் கோபாலக்ருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

  3. https://www.youtube.com/watch?v=EbWDevSHgB4 by VIZHI KIDAIKKUMA = NAAMASAGAR = VITTAL DAS MAHARAJ

  4. phenomenal rendering.the bhakthi bhavam touches our heart no doubt.

  5. This is story I haven’t heard before, a forward from a Guindiian of 1975 Batch.

    கல்திரை.

    பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு.
    மதுரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.
    இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.
    கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
    இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
    சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
    வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.
    அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.
    அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.
    அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்……

    உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!
    48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.
    திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.
    இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை அதை. எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதிபோடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.
    சம்போ மகாதேவா!!
    சேதப்படுத்தப்பட்ட சிவலிங்கத் திருமேனி சுவாமி சன்னதியில் விவரப்பலகையுடன் வைக்கப்பட்டு உள்ளது.

    Cheers!!
    V S Gopalarathnam

  6. Can you share your mail id

  7. Amazing song. Thank you for sharing. H. Balu

  8. Dear Sri Mahesh

    You made us emotional with this song… Many a times I have stood with ‘Dhara of Tears’ when I am blessed to hear this song at Bagawan RamanaMaharshi Sannandhi…

    Thanks a ton for posting this… Your picture of Sri Sri Magha Periyava Adhistanam and the Song made us to feel stand in front of Sri Periya Sannadhi and this holy song ringiging in ears

    Jaya Jaya Shankara, Hara Hara Shankara
    Om Namo Bagawathe Sri Ramanayah

    Kindest Regards
    Ramanan

  9. Dear mahesh, Please see sri Udayalur Kalyanaraman Bagavathar singing this namavali on U Tube. Alangudi Radakalyanam,. It is very nice hearing, Regards, Sekar

    Sent from my iPad

    >

  10. Very moving and Divine Prayer to Gurunathar! Beautifully sung! Hara hara Shankara, Jaya Jaya Shankara!
    Maha Periyava ThiruvadigaLee CharaNam!

  11. நமஸ்காரம்

    “நினைக்காத துன்பம் பல” என்பது பாடம். Please check.

    At HIS Charanam

    • விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
      குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

      அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
      அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

      நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
      சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
      நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
      உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

      கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
      உ ணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
      நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
      நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

  12. i am blessed enjoying this feast being my bday bliss thank u ji

  13. om shree anusha jyothiye potri avarthamm thiruppaadhangale potri potri

Leave a Reply to kvkCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading