Appeals

Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Feb’ 23 Updates

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லௌகிக நாகரிகத்தை விட்டுவிட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்கவேண்டியதில்லை. பணத்துக்காக பறக்காதபோது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்; வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர… Read More ›

Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Feb’ 23

‘நம்மால் ஹிம்சைக்கு ஆளான ஜீவராசிகளுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்க வேண்டும்; நம்மை பகவான் மன்னிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் எல்லா உயிர்களின் திருப்திக்காகவும் பலி கொடுக்கப்படுகிறது. இந்த விசுவத்தில் எவ்வளவு பிராணிகள் உண்டோ, நாய், காக்கை, சமூகப்பிரஷ்டன் உள்பட எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும் வைசுவதேவத்தில் பலி உண்டு. வைசுவதேவம் செய்தால் நாம் செய்கிற பல தோஷங்கள் விலகும்…. Read More ›

Jan’ 23-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update – Around 1500 meals served

அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் “இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்”. பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி:… Read More ›

Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Jan’ 23 Updates

மற்றவர்களை அதட்டிக் கொண்டு, ‘தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்’. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. ‘விளக்கை அணைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகி விடாதீர்கள்’ என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ… Read More ›

Jan’ 23 – 160 Cows/Calves Saved

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்ய வேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி… Read More ›

Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Jan’ 23

லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு, பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக் கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம்… Read More ›

Dec’ 22-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update – Around 1600 meals served

நல்ல அத்வைத திருஷ்டி வந்துவிட்டால் ஸ்வயம், பரம் என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, பல தினுஸில் கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஒருத்தன் தன்னுடைய இயற்கையான தர்மமாகவே ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். இப்போதும் ‘பர உபகாரம்’ என்ற Phrase தப்பாகி விடுகிறது! தனக்குப் பரமாகத்தான் இவனுக்கு எதுவுமில்லையே! ”என் கடன் பணி செய்து கிடப்பதே”… Read More ›

Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Dec’ 22 Updates

ஆசையாகக் கூப்பிட்டு எனக்கு உபசாரம் செய்கிற உங்களிடம், முதலில் உங்களுடைய புது வழிகளில் இத்தனை கெடுதல் இருக்கிறது என்று சொல்ல எனக்கே மனசு வரவில்லைதான். மற்ற விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தேன். பக்தி, ஞானம், கலாச்சாரம், ஊர்க்கதை எல்லாம் சொன்னேன். அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். ஆனாலும் அவை எல்லாம் கிளை, பூ, பழம், மாதிரி என்றால்,… Read More ›

Dec’ 22 – 228 Cows & Calves Rescued

கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி… Read More ›

Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Dec’ 22

நான் எத்தனையோ அநுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம். எவ்வளவு பண்ணவில்லை; எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும் ஜீவனோபாயத்தை அநுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும்! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் I have explained to you many of the rituals and… Read More ›

Nov’ 22-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update – Around 1000 meals served

‘பரோபகாரம்’ என்ற வார்த்தையும் ஒரு தினுஸில் தப்புதான். பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை ‘ஸ்வய உபகாரம்’ என்றுதான் சொல்ல வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Even the word “Paropakaram” which means Philanthropy is a wrong word… Read More ›

Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Nov’ 22 Updates

இப்போதிருக்கிற துவேஷம், மனக்கசப்பு, கோபதாபங்கள் போக வேண்டுமானால், வேத ரக்ஷணம் என்கிற கடமையைப் பெற்றவர்கள் அதைச் செய்து, ஸாதுக்களாக, சாந்தர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதன் பலன் மற்றவர்களுக்கு உடனே புரியாமல் போகலாம். ஹர்த்தால் வந்து கடைகளை மூடினால் உடனே சிரமம் தெரிகிற மாதிரி, வேத ரக்ஷணம் நிற்பதனால் ஏற்படும் சிரமம் சமூகத்திற்குப் தெரியாமல் போகலாம்…. Read More ›

Nov’ 22 – 50 Cows & Calves Rescued

ஸந்நியாஸியுடைய ஆஹாரத்தில் இரண்டு அம்சங்கள். ஒன்று, அது அவனுக்கு ஸத்வ குணத்தை வளர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது. இன்னொன்று, அந்த ஆஹார வஸ்து ஏதொரு பிற ஜீவனுக்கும் ஹிம்ஸை விளைவிக்காமல் பெறப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது. கோக்ஷீரத்தில் இந்த இரண்டும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அது ஸத்வத்தைப் புகட்டுவதாக உள்ளது. அதை கோவிடமிருந்து க்ரஹிப்பதில் அந்த கோவுக்கு ஹிம்ஸையும்… Read More ›

Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Nov’ 22

ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக் கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக் கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே த்யானம் செய்ய முடிகிறது. கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த… Read More ›

Oct’ 22 – 59 Cows & Calves Rescued

ப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல… Read More ›

Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Oct’ 22 Updates

ஒரு நோக்கம் (purpose) இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி ‘பர்பஸ்’ இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு… Read More ›

Akshaya Thrithiyai Kainkaryam (SPK #52) – Ambal Temple Construction Update

‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம் உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர… Read More ›

Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Oct’ 22

பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம்… Read More ›