karunai deivam

Guntakal & Pandaripuram

பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்: ”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா. ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது…. Read More ›

Punya Bhoomi Mahendramangalam

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும்போது, மகா பெரியவாளுக்கு வயது 13. கும்பகோணம் மடத்தில் அவரைப் பார்க்க வருவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. இதனால், வேத பாடங்களைக் கற்பதற்கு அவரால் நேரம் ஒதுக்கவே முடியவில்லை. என்ன செய்வது என மடத்து அதிகாரிகள் யோசித்தனர். முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் அவரைத்… Read More ›

Sri Kamakshidasan – Part II

‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை! தேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என… Read More ›

Sri Kamakshidasan

சென்னை- புதுப்பெருங்களத்தூரில், மணிமேகலை தெரு, ஸ்ரீலிங்கம் குடியிருப்பில் வசிக்கிறார் காமாட்சிதாசன் சீனிவாசன். சொந்த ஊர்- தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரம். இவரின் தகப்பனார் வெங்கட்ராமய்யர், காஞ்சி மடத்தில் (1901-1966) கார்வாராக கைங்கரியம் செய்து வந்தவர். தன்னை, ‘பெரியவாளின் அடிமை’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் காமாட்சிதாசன் சீனிவாசன், தனது 18-வது வயதில், முதன்முதலாக காஞ்சி மகாப் பெரியவாளைச் சந்தித்த… Read More ›

Stomach Pain

‘காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன். ”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று… Read More ›

Lord Sidheswarar and Govinda Gosham

”மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும் பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம்… Read More ›

Guruprasadam and Sahasra Gayathri

  மகா பெரியவாளுடன் பல இடங்களுக்கும் போய் வந்திருக்கிறார் பட்டாபி சார். பெரியவருக்கு ஆசை ஆசையாகப் பணிவிடைகள் செய்திருக்கிறார். அது காஞ்சி மடத்திலாக இருக்கும்; அல்லது, யாத்திரை போன இடத்திலாக இருக்கும். ”பெரியவாளோட குரு மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை ஷஹாபாத் நகரில், நதிக்கரையில் நடந்தது. அந்த ஆராதனையை குரு ஆராதனைன்னு சொல்லுவா. அந்த நதியிலே… Read More ›

Sivan Saving Sivan

பட்டாபி சார், பெரியவா பற்றிய செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்குக் கொண்டு வந்து, அவற்றைச் சுவாரசியமான கதை போல விவரித்துச் சொல்லுவார். அதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் பாடங்களும் நிறையவே இருக்கும்… திருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார்… Read More ›