ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 13:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 13:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 5:

ShrI BhavanI SahasranAmA Vaibhavam 13:

ShrI BhavanI SahasranAmA 5:

விஷ்ணுமாயாயை நம:

1) மும்மூர்த்திகளாலும் கடக்கமுடியாத வைஷ்ணவீ மாயா ஸ்வரூபத்தில் விளங்குபவள்

2) ஞானிகளும் பலவந்தமாக அஞ்ஞான வசப்படுதல் கர்மாவின் காரணத்தினால். கர்மங்களுக்கு பலனக்கும் மஹாமாயா ஸ்வரூபிணி

3) மதுகைடபர்களால் ஆபத்து ஏற்பட்ட போது, ஶ்ரீப்ரஹ்ம தேவர் பகவதி ஜகத்தாத்ரி ஶ்ரீவிஷ்ணுமாயையை சரணம் அடைந்தார். அம்பிகை தஶானன மஹாகாலி வடிவில் தோன்றி ப்ரஹ்மாவை ரக்ஷித்தாள்.

4) மதுகைடபர்களை வதைப்பதற்காக வேண்டி, ஶ்ரீமஹாவிஷ்ணு அம்பாளை சரணடைந்தார். அம்பிகை மஹாவிஷ்ணுவிற்கு மதுகைடபர்களை ஒழிக்கும் பராக்ரமத்தை அனுக்ரஹம் செய்தாள்.

5) சரணமடைவோரின் துன்பங்களை விரட்டி, ஞானமளிக்கும் பகவதி ஶ்ரீமஹாமாயை. அவளே விஷ்ணுமாயை

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading