Thanks to Sri Ganesa Sarma for FB posting.
He will be called as Shri Akilandeshvara Anandha Sarasvathi Svamigal from now on.
Click here to see the video – https://www.liveibc.com/mahaperiyava/?fbclid=IwAR2TSmleS14fXrntXYwwVCFpPKWwOmw2okLi1dB3KkMM88ECsTmMJ2JUCuw
Our namaskaram to mama!
Categories: Photos
Kindly let me know the current address of sri sri swamigal. I have to take blessings from HH
சமீபத்தில் ஸ்ரீ வேதபுரி மாமா எழுதிய ‘தாயுமான மகான் -பாகம் 1, 2, 3’ படித்து, பின்னர் அவர் பற்றி பல பேர் interview -ல் சொல்லியதை அசை போட்டதால் வந்த விளைவு இந்த வரிகள்:
யாதும் அறியாத பருவம் ஐயா அது உமக்கு அது
யாதும் அறியாத பருவம்
எட்டு வயது – இன்னும் உமக்கு
நிரம்பிட்ட பாடி ல்லை
எசயநூர் கிராமத்தில் எளிமையாய் வாழ்ந்து வந்தீர்
தாயை இழந்து விட்டீர் – அன்பு
தந்தை வளர்த்து வந்தார்
காஞ்சி மஹா பெரியவா ஒருநாள் பெரும்
கருணையோடு அங்கு வந்தார்
கிட்டக்க சென்றிட்டே அவரை தரிசனம் காணாமல்
எட்டக்க நின்றுகொண்டே அவரை எட்டி எட்டி பார்த்தீர்
காஞ்சி மஹானும் மிக்க
கருணையோடு உம்மை பார்த்து
என்ன பெயர் உனக்கு என்றிடவே
வேதபுரி என்றீர் – அந்த
வேத நாயகனும் உன்னை யார் என்றறிந்திருந்தார்
என்னுடன் வருவாயா என்றவர் கேட்டதற்கு
ஏதும் நினையாமல், உடனே வந்துவிட்டேன் என்று சொன்னீர்
காட்டிலும் மேட்டிலுமே அந்த
மேனா செல்லும் இடமெல்லாம்
கட்டிய வேட்டியுடன் நீங்கள்
கூடவே ஓடி வந்தீர்
கால்கள் கடுத்திட்டால் அதை
காஞ்சி மஹான் அறிவார்
பின்னால் வரும் வண்டியில்
ஏற்றி விடச் செய்வார்
நிர்கதியாய் நிற்பவர்க்கு – அவரன்றி
வேறு தெய்வம் உண்டோ?
பட்டினி பசியோடு ஒரு பச்சிளம் பாலகன்
எட்டு வயதுச் சிறுவன்
அம்மா இல்லாமல் ஓர் ஆதரவு இல்லாமல்
காஞ்சி மஹானே கதி
என்றி ருந்திடும் போது – தன்
பிக்ஷையில் ஒரு பங்கு அவர்
வாஞ்சையுடன் கொடுப்பார்
தாயு மானவரே அவர்
தாயு மானவரே
உம்மாச்சி உம்மாச்சி என்பீர்
உன்மத்தம் பிடித்தாற் போல்
உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டால்
வேறோன்று பேச தெரியாது
பெண்டு பிள்ளைகட்கு ஒரு
பிரச்னை என்றாலும் – உங்கள்
உம்மாச்சியை விட்டகலீர்
உத்தமர் ஐயா நீர்
காஞ்சி மாமுனிவர் உமக்களித்த பட்டம்
பரமேஸ்வரனே அளித்த பிரமஹ்ஸ்ரீ பட்டம்
வேதப் பிராமணர்களுக்கும் இல்லை அப்பட்டம்
வைஷ்ணவ பிரபத்தி செய்த உமக்கே அப்பட்டம்
அன்றோடு இன்றுவரை அணுக்கத் தொண்டர்கள்
ஆற்றிட்ட கைங்கர்யம் அதற்கோர் அளவில்லை
சித்திர குப்தனும் ஏட்டில் எழுத வில்லை
சிவனை சிந்திப்பாற்கு எந்த குறையும் இல்லை
இங்கிருந்த படியே எங்கள் இரு கைகூப்பி
வந்தனம் செய்கின்றோம் வேறொன்றும் அறிந்திலோம்
உங்கள் கைகளை தாரும் ஐயா
எங்கள் கண்களில் ஒத்தி கொள்வோம்
பூஜ்ய ஸ்ரீ அகிலாண்டேசுவரானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளில் பணிந்து வணங்குகிறேன்.
Namo Namah 🙏🌺
Thank you for sharing