Thanks to Sri Mannargudi Sitaraman mama for the share.
” நீ பாவி இல்லை, நீ என்னை தொட்டு சேவை செய்ய முடியவில்லை என்று தாப படவேண்டாம். நானே உன்னை தொடுகிறேன்……..
….காஞ்சி மஹா சுவாமி……. இன்றும் பிரத்யக்ஷமாக இருக்கிறார்!
சத்தியம் சத்தியம் சத்தியம் !!
Sri. Sankar arumugam experience……..
Sankar Arumugam had a dream of Sri MahaPeriyava. Sankar Arumugam narrates in his own words…
வணக்கம் சாமி,
என் பெயர் சங்கர் ஆறுமுகம். காஞ்சி மஹா பெரியவர் மற்றும் சிவன் சாரின் பக்தன். தற்சமயம் நான் போலந்து நாட்டில் வசிக்கின்றேன்.
நேற்று இரவு ஒரு அதிசயம் நடந்தது. அதை உங்களோடு பகிர்ந்து விரும்புகிறேன். அனுஷ பூஜையை முடித்து விட்டு, மஹா பெரியவரின் புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்து கொண்டிருந்தேன்.
மஹா பெரியவரின் பாத தரிசனம் வீடியோ, சந்திரமௌலி மாமா பெரியவரின் பாதங்களுக்கு கடுக்காய் பூசிய அனுபவங்கள் வீடியோ .. இவற்றை எல்லா நண்பர்களுக்கும் whatsapp இல் அனுப்பி வைத்தேன்.
பிறகு , என் மனைவியிடம் ” நாம் எல்லாம் பாவிகள், பெரியவரின் பாதங்களுக்கு பணிவிடையும் செய்யவில்லை.. அந்த மகானை பார்க்கவும் குடுத்து வைக்கவில்லை ” என்று சொல்லி கொண்டிருந்தேன்.
நாங்கள் இருவரும் தூங்க சென்றோம். தரையில் தான் படுப்பது வழக்கம். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!
நான் படுத்த சில நிமிடங்களில், மஹா பெரியவர் என் தலைக்கு மிக அருகில் இருப்பதை உணர்ந்தேன். இது கனவு அல்ல ! பிரத்யக்ஷமாக நேரில் நடந்தது.
கண்களை திறக்க பயமாக இருந்தது. நான் கண்களை திறக்கவில்லை. இருதயம் மிக வேகமாக துடித்து கொண்டிருந்தது.
என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, இருதயம் வேகமாக துடித்து கொண்டிருந்தது.
என் தலைக்கு மேல், சுமார் 1000 தாமரை மலர்களுக்கு மேல் இருப்பதாய் உணர்ந்தேன். வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமான உணர்வு. மகா பெரியவர் என்ன செய்தாலும் சரி, சத்தியமாக என்ன நடந்தாலும் சரி, கண்களை திறக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்.
மஹா சுவாமி தனது வலது கைகளை மெதுவாக உயர்த்தி , அந்த தாமரை மலர்களை தொட்டார்…. தொட்ட அடுத்த வினாடி, என் தலை முழுவதும் சிலிர்த்து , உடலில் ஒவ்வொரு செல்களும் , ரோமங்களும் சிலிர்த்து …, மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
மீண்டும் சொல்கிறேன், இவை எதுவும் கனவு அல்ல! பிரத்யக்ஷமாக நேரில் நடந்த நிகழ்ச்சி.
கண்களை திறக்கவே கூடாது,.. இந்த நிலையிலேயே அப்படியே இருந்து விட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருந்த நான்… ஏனோ தெரியாமல் , இடது கண்ணை மட்டும் மெதுவாக திறந்து பார்த்தேன்.
அவ்வளவுதான், படிப்படியாக, உணர்வுகள் குறைந்து.. இருதயம் சகஜ நிலைக்கு வந்துவிட்டது.
” நீ பாவி இல்லை, நீ என்னை தொட்டு சேவை செய்ய முடியவில்லை என்று தாப படவேண்டாம். நானே உன்னை தொடுகிறேன் ” என்று மஹா சுவாமி சொன்னது போல உணர்கிறேன்!
![]()

2 Responses
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சரணம் சரணம் .
ஜானகிராமன் . நாகப்பட்டிணம்
Maha Periyava charanam
Each and everybody should feel the experience Mr Shankar Arumugam family blessed with Maha Periyava.
Today when I am murmuring the song of THAMARAI MALAR ONDRU KANDEEN KANCHI MA MUNIYIN URUVINILE I happened to see this post
Really I am also a luckier one to see the thousands of Thamarai
Jaya jaya Shankara Hara Hara Shankara
Ramanarayanan
WALAJAPET