அடிவைத்துவா அருட்கடலே

Beautiful poem – touched my heart

அடிவைத்துவா அருட்கடலே
விடிவைத்தரவா ஒளிக்கடலே
படியிறங்கிவா பொற்பதமே
மனமிரங்கிவா மஹாதெய்வமே!

தெளிவைத்தரவா ஞானக்கடலே
களைப்பைப்போக்கவா ஆனந்தக்கடலே
மெள்ளவேவா மல்லிகைப்பதமே
அள்ளியேத்தரவா அருமைதெய்வமே!

நிம்மதித்தரவா தவக்கடலே
நேரிலேவா சத்தியக்கடலே
நில்லாதுவா தாமரைப்பதமே
நிழலைத்தரவா நிர்மலதெய்வமே!

ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜயஜய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

-ஜெயந்தி ராம்கி

30//12/2019

Loading

3 Responses

  1. Congratulations to Smt.Jayanthi Ramki,for an excellent poem on Mahaperiyava.
    JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.

  2. courtesy http://valmikiramayanam.in/?p=6343

    கருணை என்னும் வாரிதியே காஞ்சி நகர் பெரும் தவமே
    காமகோடி பீடமதன் கதிரொளியே
    கண்ணொளியால் அருள் வழங்கும் அத்புதமே
    அருமறைத்தேன் பொழிமுகிலே
    ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே
    தருணமதை நோக்காமல் காரணமும் கருதாமல்
    தன்னளியால் காமாக்ஷி தாயார் போல் முகமலர்ந்து
    பரிவுடனே அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே
    பதமலரே தஞ்சமென்று வந்தடைந்தேன், ஏற்றருளே !!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading