Ambal Sketch by Sudhan & Article from Smt Saraswathi Mami

Thanks to Sudhan for a wonderful drawing and a lovely article from Mami on Mooka Pancha Shathi.

Maha-Nitya-Sudhan.jpeg

எவ்வாறு மனதும் ஞானேந்திரியங்களும் புஷ்டியடைந்த பிறகே வாக்கு வெளிக்கிளம்புகின்றதோ, அது போலவே, ஆர்யசதகமும், பாதரவிந்த சதகமும், ஆன பிறகு, தன்னுடைய பிரேமைக்கு உரியதான பொருளைத் தடங்கலின்றிப் புகழந்து பேசத் தொடங்குகிறார். “पाण्डित्यं परमेश्वरि பாண்டித்யம் பரமேச்வரி” என்று தொடங்கும் ஸ்துதி சதகத்தாலே.

லௌகிக ஞானம் முதலியவற்றிலே தேர்ச்சியடைந்த இளைஞன் எவ்வாறு லௌகிகச் செல்வங்களைப் பெறுவதற்கு உரியவனாகின்றானோ, அது போலவே முன்னாலே செய்த ஸ்துதியின் பயனாக, பக்தன் அம்பிகையின் சிறந்த கடாக்ஷத்தைப் பெற்று மிகச் சிறந்த சம்வித்ஞானானுபவத்திற்கு ஏற்றவையான தேஜஸின் புஷ்டி முதலியவற்றிற்குப் பாத்திரனாகின்றான் என்னும் இக் கருத்து ” अस्तं क्ष्णान्न्यन्तु मे परितापसूर्यं – அஸ்தம் க்ஷணாத் நயது மே பரிதாப ஸூர்யம் ” [கடாக்ஷ. 6] என்பது முதனால வருணனைகளாலே கடாக்ஷ சாதகத்திலே குறிப்பிடப் பெற்றது.

எவ்வாறு லௌகிக ஸம்பத்தால் நிறைந்த முழு யௌவனத்தையும் உடையவனானவன் லௌகிக சிருங்காரமாகிய இன்பத்தை அனுபவிப்பதற்கு உரியவனாகின்றானோ, அதே போல் தேவியின் பரம அனுக்கிரஹத்திற்குப் பாத்திரனானவன் அவளுடைய புன்முறுவலாகிய நிலாவோடு விளங்கும் ஆனந்தமாகிய சந்திரனைப் போல அலௌகிகமானதும் (பாரமார்த்திகமானதும் ) அளவு கடந்ததுமான ஆனந்தத்தை அனுபவிப்பவனாய் விளங்குகிறான் என்னும் இந்த கருத்தின் ரீதியையே மஹாகவியானவர் தாமே பஞ்சசதியைப் பூர்த்தி செய்யும் பாடலிலே விளங்க வைக்கிறார். “आर्यामेव विभवयन् – ஆர்யாவிமேவ விபாவயன்’ என்று

உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பரதேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான் ன்னு ஆசீர்வாதம் பண்ணி இருக்கா. இந்த குரு பௌர்ணமியில் மஹாபெரியவா அனுக்ரஹத்துக்கு பாத்திரம் ஆக வேண்டி இந்த மூக பஞ்ச சதி ஸ்தோத்ரத்தை படிக்கறது என்று சங்கல்பம் செய்து கொள்வோம்.

ஜானகீ காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம

Loading

7 Responses

  1. on seeing the drawing, these lines came to my mind. “Gambiira Gaganandastha Garvitha Ganaloluba….” I dont know the meaning!!!

  2. What a divinity in this drawing, Great. May Ambal’s Grace be ever on this Artist. Thx for sharing.

Leave a Reply to RevathyCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading