Kunjithapadha Periyava

Thanks to Sri Sankaranarayanan for this great work.

kunjithapatham Periyava drawing.jpg

I am also giving Sri Saanuputhiran’s guru stuthi ….

‪#‎ஸ்ரீகுருதுதி‬

திருச்சிற் றம்பலத்துச்
சீராளன் பதம்மேவி
அருமருந் தாயுதவும்
குஞ்சித பாதமேந்தும்

குருமணித் தூமணியாம்
சிவபுரத்து சீர்குருவாம்
குருபரன் குணசீலன்
குஞ்சித சங்கரனை

திருவெனத் தியானித்து
மனமுருகிப் பணிவோர்க்கு
வருவினைத் தீர்ந்தோடும்!
வவ்வினையும் நகர்ந்தோடும்!

தருவரம் கைகூடும்!
தவசீலன் அருள்கிட்டும்!
இருளேதும் தீண்டாமல்
குருவருளும் ஒளிசேர்க்கும்!

இருவிழியின் கருணையிலே
மனக்கவலை மறைந்துவிடும்!
குருகருணை துணையிருக்க
வலியெல்லாம் மறைந்துவிடும்!

ஆம்! இன்றளவிலே ஆயிரமாயிரம் பக்தர்களும் இப்பயன் பெற்று அடியேனிடம் பகிர்ந்தும் வருகிறார்கள். சர்வ சத்யமான வாக்காக குஞ்சித சங்கரன் அனைவரையும் காத்தருளும் வகைதனைக் கண்டு அகம் மகிழாதார் யாருமுளரோ!

கலி தோஷமெலாம் நமை விட்டகல
வளி வாகையுற அருள் குருநிதியே
நலி வாழ்விதனை உயர் மகிழ்வுடனே
கிலி யின்றிப்பெற அருள் சங்கரனே

என தோடகமாய் தோத்தரித்து ஸ்ரீகுஞ்சித சங்கரனை போற்றி நமஸ்கரித்து ரோக நிவாரணம் பெற்று, நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் எனும் பேற்றினை அடைந்து இன்புற வாழ்வோமாக!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

 

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading