Skanda Sashti Special

periyava_malai_mandir_murugan

This is the first time I am trying to a collage of postings….Although it might look longer, I guess it is interesting to see so many things on Periyava and Lord Muruga.

It is said that even the Veda Purusha was not able to describe the greatness, power and glory of Lord Subrahmanya (KArthikEya) and just uttered : ” SubrahmanyOm SubrahmanyOm SubrahmanyOm ” (Yagurveda AraNyaka, Aruna Prashnah )

HH Kripanandha Variyar Swamigal says this slightly differently that vedam was not convinced by saying Lord’s name just once – so it said thrice. As per our veda you should not chant more than thrice. He also uses an example of a rubber stamp. When we use ink-pad and rubber stamp, we normally try that on other papers once or twice before you put it on the important paper and sign it. So vedam also called his name twice before it said for the last time!

As Sri Variyar swamigal says, one should be blessed to worship Subrahmanyar. One who worships Subrahmanyar has no birth as He is the embodiment of Sivam & Sakthi together, who gives us the knowledge and enlightenment. His form represents Omkara tatvam etc…

On this auspicious Skanda Sashti day, let us all pray Lord Subrahmanya to bless us all!

“Om tatpurushAya vidmahE | mahAsEnAya dhImahi | tannah shaNmukhah prachOdayaath”

முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லிருக்கிறார்.

நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க
ஏகபோகமாய் நீயு நானுமாய்
இறுகு வகை பரம் சுகமருள்
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே

Vetri Vel Muruganukku Arohara!!! Gnana Vel Muruganukku Arohara!!!


Click here to read the story of Lord Muruga’s previous birth as told by Mahaperiyava in Dheivathin Kural.


pudhuperiyava_vel

HH Pudhu Periyava’s chanting and also meaning for some of the verses. Looks like someone had also included English translation of Periyava’s explanation. Few days back, I saw a photo of HH Pudhu Periyava doing deeparathanai to Lord Subrahmanya but I couldn’t find it again! Thanks to FB for making post disappear rapidly!

Enjoy!


Story of Arupadai Veedu in Chennai

In 1984 Kanchi Paramacharya was camping at Gulbarga in Karnataka State border when Dr. Alagappa Alagappan, an Ex-UN Official went to have his darshan. He mentioned to the Acharya,

“How about having one temple for all the six Padai Veedu temples of Lord Muruga at one place and that too in granite?”

The Sage looked at him with His usual smile and said:

“Yes, you may build. I will get you the land.”

With this consent He blessed Dr Alagappa Alagappan. The Acharya immediately arranged for an acre of land at Besant Nagar in Chennai near the sea, through the then Chief Minister MGR and HR & CE Minister Mr. R.M. Veerappan.

Dr. Alagappan is the pioneer in building Hindu temples in USA. First he built Maha Vallabha Ganapati temple in New York and was instrumental in building many others like the Venkatachalapati temple in Pittsburgh and Meenakshi temple in Houston. He was advising and helping as well as organizing temple architects (stapathis) from India to build these temples.

Śrī Śrī Maha Periyaval advised Dr.Alagappan to take up the project and guided him well. He has stressed that it is difficult for the devotees to visit all six Padai Veedus when touring Tamil Nadu. He wished it should be in a single seashore site and he was all sure Tamil Nadu would become prosperous on account of it.

Swami Malai praharam and temple were built first in 1995 in remembrance of Paramacharya, whose original name was Swaminathan. Another three temples — the Mahavallabha Ganapati, Palani and Tiruttani temples — were completed and consecrated in 1998. Three other temples, namely Tiruchendur, Tirupparankundram and Palamudirsolai, have also been completed with the concecration having taken place in the presence of His Holiness Śrī Jayendra Saraswati Swamigal of Śrī Kanchi Kamakoti Peetam on 21st June 2002.

Shri Muthiah Stapathy, who has built many temples in India and in USA, is the architect of this project. The Mandalabhishekam of the temple was completed on the 4th Aug 2002. Religious discourses, music and dance performances took place on all these 45 days. During the period Tiruppugazh sangams from various parts of Chennai visited the temple and rendered Tiruppugazh songs on Saturdays. It was a rare occasion on the 28th July to listen to the rare compositions of Saint Arunagirinathar sung by six groups.

It is widely believed that Pamban Swamigal, an ardent devotee of Lord Muruga lived in the last century and whose samadhi is very close by, had a premonition that the six temples of Lord Muruga were going to be constructed nearby. Already a number of miracles have been happening in this temple complex.

At Swamimalai in the form of Gurunathan he is blessing students with admission and excellence in their studies. When the Trustees of the temple went to order a Vel from the Vummidiar jewellers, to their great surprise they were told that they had a Vel ready with them especially for Swaminatha Swami. And many other such instances can also be cited.

In this complex Swamimalai is situated at the northeast, Tiruchendur at the east, Palamudirsolai and Tirupparankundram at the south, Palani at the west and Tiruttani in the northwest. The Mahavallabha Ganapati temple is in the center.

This temple complex is attracting a large number of devotees from far and near. In addition to local dignitaries, even devotees from abroad – about fifty Americans led by Guru Bhaskaran Pillai and also Swamis Bodhinatha and Saravanabhavanatha of Sivaya Subramuniya Swami’s Saiva Siddhanta Church of Hawaii, USA, have also visited and worshipped in this temple. Thanking Lord Muruga for bestowing this place on the seashore, Smt. Alamelu said that, unlike other places, seashore is ideal for meditation with cool and peaceful atmosphere.

Homams like Skanda Homam, Rudra Homam, and Ganapati Homam are regularly conducted at the request of the devotees. Thai Pusam, Panguni Uttiram, Aadi Krittikai, and Skanda Shashti festivals are celebrated in the traditional way with Kavadi, Paal Kudam, etc. Valli Tirukkalyanam at the temple has become popular with parents of marriageable girls, and many of them have had immediate grant of their wishes.


ஸ்ரீ சுவாமிநாத குருப்புகழ்

namavali006

சங்கரா! அன்று எம் அருணகிரியார் திருத்தணிகை வேலவனை பிரார்த்தித்து, நோயினால் துன்பப்படாத வாழ்வு கேட்டுப் பாடிய திருப்புகழின் சந்தத்திலே அடியவனும் இன்றைய தினம் எங்கள் ஸ்ரீ சுவாமிநாத குருவான ஸ்ரீ மஹாஸ்வாமிகளான உங்களை “குருப்புகழ்“ பாடிப் போற்றுகின்றேன், பராபரனே!

ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர…

இருளென ரோக முடமதன் வாச
மெதுமணு காத …….. கடமோடே

யினிநலி யாத நிலைதனி லேகி
பெறுநல மாக …….. சுகமோடே

பெருவள மீயுங் குருவடி தேட
வரமெனக் கீயு …….. முதல்வோனே

பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாசி …….. அருள்வாயே

வரமொடு கூடி யறிதற்கு மாதி
குருவரு ளாசி ……… பெறவேண்டி

திருவுரு காண மனமுற நாடி
கதியுன தாகி ……… வருவேனே

தருநிழல் போலே யருளிட வந்த
சந்திர சேகர ……… குருநாதா

இருவினை களையு மருட்தல காஞ்சித்
திருத்தல மேவு ……… பெருமாளே!

[composed by SaanuPuthran]


An incident of Sri P.Swaminathan – very interesting….

நமஸ்காரம்.

மகா பெரியவா சரணம்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர் பனஸ்வாடி ‘வேல் பூஜை அன்பர்கள்’ நடத்திய மூன்றாம் ஆண்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் (பெங்களூர் அல்சூர் ஏரி அருகே உள்ள ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் திருமடத்தில்) சொற்பொழிவாற்றினேன்.

இரு தினங்களும் திரளான பக்தர்கள் கூட்டம். இந்த நிகழ்வின் இரண்டாம் நாள் வைபவத்தை என் முகநூலில் பதிவிட்டேன். முருக பக்தர்களது உருக்கமான வரவேற்பும் உற்சாகமும் என்னை நெகிழ்வடைய வைத்து விட்டது.

திங்கள் காலை சென்னை திரும்பினேன். அன்று மதியம் திருச்சியில் உள்ள எனது நண்பர் (மங்கள் ஹோம் பில்டர்ஸ்) திரு முரளி அழைத்தார். அவரது ப்ராஜெக்ட் பூர்த்தி ஆகி, வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர், வேல் ஒன்றை பரிசாக அளித்ததாகச் சொல்லி, எப்படி வழிபட வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.

அவராக அன்பளிப்பாக வந்த வேல் பற்றி என்னிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நான் யோசித்தேன்.

அடுத்த நாளான இன்று காலை பெரியவா அதிஷ்டானம் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் சென்றேன். அற்புதமான தரிசனம். அதன் பின் ஓரிக்கை சென்றேன்.

ஓரிக்கை பெரியவா திருச்சந்நிதியில் மூலவர் பெரியவா விக்கிரகத்துக்கு முன்னால் திருப்பாதுகைக்கு அருகில் ஒரு சிறிய பெரியவா விக்கிரமம் (இதுதான் அனுஷத்தின்போது தேரில் வலம் வருமாம்). அவர் தோளில் ஒரு சிறு வேல் சார்த்தி இருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். இதற்கு முன் இந்த விக்கிரகம் என் கண்ணில் பட்டதும் இல்லை. அதுவும் வித்தியாசமாக வேல்!

சனி மற்றும் ஞாயிறில் பெங்களூரில் வேல் பூஜை அன்பர்கள் வைபவம்.

அடுத்த நாள் திங்கட்கிழமை வேல் பற்றி நண்பர் முரளியின் விசாரிப்பு.

நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை ஓரிக்கை பெரியவாளிடம் ஒரு வேல்.

எனக்கு ஆச்சரியம். தொடர்ந்து வேல்!

ஓரிக்கையில் பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் திரு கணபதியிடம் ‘என்னது… பெரியவாளிடம் வேல் இருக்கு?’ என்று கேட்டதற்கு, ‘வாங்கோ… பிள்ளையார் சந்நிதிக்கு’ என்று கூட்டிச் சென்று பிள்ளையாரிடமும் ஒரு சிறு வேலைக் காண்பித்தார்.

ஆச்சரியம் விடவில்லை.

எனது வேல் அனுபவங்களை நெகிழ்வுடன் அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

ஓரிக்கை கணபதி சொன்னார்: ‘‘பெரியவா கிட்ட வேல் இருக்கிறது பத்தி பலரும் கேக்கலை. உங்களைக் கேக்க வைக்கறார்.

நீங்க எப்படி வேல் அனுபவங்களைச் சொல்றேளோ, அதுபோல்தான் இங்கும். ஓரிக்கை அடிக்கடி வர்ற ஒரு பக்தர் பழநி செல்வதாகச் சொன்னார். அங்கே ஏதாவது வாங்கிண்டு வரணுமா என்று கேட்டார். பழநிலேர்ந்து வேல் வாங்கிண்டு வாங்கோ. பெரியவாளுக்கு சமர்ப்பிங்கோ’ என்று சொன்னேன்.

பழநியில் தரிசனம் முடிந்து அவருக்கு வேல் வாங்கி இருக்கிறார். வேல் வாங்கி வரும்போது (ஒன்றுக்கு இரண்டு வேல் வாங்கி இருக்கிறார்) அவர் ஓட்டி வந்த கார் மிகப் பெரிய விபத்தை சந்தித்து, காரில் இருந்தவர்களுக்கு எந்த வித சேதமும் இல்லாமல், கார் அப்பளம் ஆகியுள்ளது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

விபத்தின் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் விலகாமல், அந்த பக்தர் சிலிர்ப்புடன் வந்து இந்த இரண்டு வேலையும் இங்கே சமர்ப்பித்தார். ‘இந்த வேல்தான் என்னை காப்பாத்தி இருக்கு’ என்று உருகினார்.

அவர் வாங்கி வந்து சமர்ப்பித்த இரண்டு வேல்களில் ஒன்று பெரியவாளிடம்; இன்னொன்று விநாயகரிடம்.

உங்களையும் வேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசிக்குமாறு பெரியவா சொல்றார் போலிருக்கு’’ என்று முடித்தார்.

தரிசனம் முடிந்து டிராவல்ஸ் காரில் தாம்பரம் திரும்பிக் கொண்டிருக்கும்போது வாலாஜாபாத் அருகே முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பெரிதாக எழுதி இருந்த வாசகம்:
சக்தி வேல். கூடவே, வேலின் படம் வேறு!

சுவாமிமலைக்குக் கூடிய விரைவில் பயணப்பட வேண்டும்.

எங்கூர் முருகன். எனக்கு ரொம்பவும் பிடித்த ஸ்வாமிநாதன்… குருஸ்வாமி…

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்


Murugan_Periyava

 

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள். இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்த்து. எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள். இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான். ‘ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?’ என்று குறிப்பிட்டார்.

1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து kaakalகல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள். ” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன. அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார், “ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்”என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ,” என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான் என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை. ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து,” ‘சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். ‘ அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார். தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார். கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8.9.1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா. நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிபிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். “ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல்நாட்டுவிழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரானசிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7.6.1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார். அவ்வாறே அமைத்தார்கள். பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து kakaகலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது எனபதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.



Categories: Audio Content, Devotee Experiences, Upanyasam

7 replies

  1. This website is fantastic.Keep up your great work.Thanks a ton.

  2. To see, to read and to share it with me is the blessing I have received on Skandha Shashti. I regreted for not having gone to the nearby temple, regretted having missed Soorasamharam live relay but everything has been wiped out by Maha Peryava’s anugraham,
    Many many thanks for sharing.

  3. great, would be wonderful to see the photos of the six temples in besant nagar.

  4. VeRRi Vel Muruganukku Hara Haro Hara! Swaminaatha Sathguru ThiruvadigaL CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  5. muruga muruga muruga saranam
    vadivel azhaga muruga saranam
    valli manala muruga saranam
    saranam saranam saravanabhava om.

    இல்லறத்தான் இல்லேன் இயற்கைத் துறவி அல்லேன்
    சொல்லறத்துள் ஒன்றேனும் இல்லேன் – நாயினேன்
    உயர்ந்த திருபோரூரா என்றே நான் ஈடேறுவேன்!
    ஏது பிழை செய்தாலும் ஏழையெனுக்கு இறங்கி
    தீது புரியாத தெய்வமே
    நீதி தழைக்கின்ற போருர்த் தனிமுதலே
    நாயேன் பிழைக்கின்ற ஆறு நீ பேசு!

    ஆசையராய் பாசம் விடாய் ஆன சிவா பூசை பண்ணாய்
    நேசமுடன் ஐந்துதெழுத்தை நீ நினையாய்
    சீ சீ மனமே உனக்கு என்ன வாய் …

  6. Namaste. Can some one please translate this into English. Sincere thanks in advance.

Leave a Reply to L RamanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading