பின்ன எதுக்கு (டேப்புகளை) எடுத்து வந்திருக்கான்?

Rare photo and a related event – Thanks to Balahanuman blog for the article and Sri Erode Nagarajan for the share in whatsapp….

Periyava_Karvet_Nagar.jpg

(It took a while for me to understand where the car is and how Periyava is listening through the speaker!)

1970-களின் பிற்பகுதியில், ஆந்த்ரப் பிரதேசத்தில், கர்னூலுக்கு வடக்கே துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு பெரிய மரத்தின் அடியில் தர்சனம் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீ காஞ்சி பரமாசார்யாளை, பிரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் பூர்வாச்ரம குமாரர் தர்சனம் செய்த போது, சேலம் சின்ன திருப்பதியில் ஸ்ரீ தீக்ஷிதரின் அதிஷ்டான பூஜை பற்றி விசாரித்தபின், நடந்த உரையாடல்.

ஸ்ரீ ஆசார்யாள்: அவன் தகப்பனாரின் உபன்யாச ரெகார்டிங்குகளை பத்திரமாக வைத்திருக்கானா?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: கிடைத்த பகுதிகளை வச்சிருக்கோம்.

ஸ்ரீ ஆசார்யாள்: இங்கு எடுத்துண்டு வந்திருக்கானா?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: எடுத்துண்டு வந்திருக்கேன்.

ஸ்ரீ ஆசார்யாள்: இங்கு போட முடியுமா ?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: உத்தரவு. (அங்கு வந்திருந்த பக்தர்கள் எவரிடமும் டேப் ரெகார்டர் இருக்கவில்லை. இதற்கு சுமார் பத்து நிமிடம் தாமதம் ஆனதில்,)

ஸ்ரீ ஆசார்யாள்: என்ன தாமஸம்?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: எவரிடமும் டேப் ரெகார்டர் இல்லை…

ஸ்ரீ ஆசார்யாள்: பின்ன எதுக்கு (டேப்புகளை) எடுத்து வந்திருக்கான்?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: (நாங்கள் வந்துள்ள) காரில் டேப் ரெகார்டர் உள்ளது…

ஸ்ரீ ஆசார்யாள்: அதுல இப்ப போட முடியுமா ?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: உத்தரவு. (காரை நதிக்கரைக்கே எடுத்து வர செய்கை செய்யப்பட்டது)

ஸ்ரீ ஆசார்யாளின் உத்திரவின்படி, நாங்கள் சென்றிருந்த காரையே, (பக்தர்கள் கைகொடுத்து தள்ளி உபகரிக்க) நதிக்கரையின் மணலில் எடுத்து வந்து, அதிலுள்ள ஸ்பீக்கரை வெளியில் எடுக்க முற்பட்டோம். ஸ்ரீ ஆசார்யாளின் அருகில் ஸ்பீக்கர் வரும் அளவு, தேவையான ஒயர் இருந்ததைக்கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டோம். அவசரத்தில் அப்பொழுது கையில் கிடைத்த டேப்பைப் போட்டவுடன், தனது கைகளை வஸ்திரத்துக்குள் வைத்துக் கொண்டு ஜபம் செய்தவாறே சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல், ஒரு அசைவும் இல்லாமல் கேட்டார்கள்.

உபன்யாஸ நடுவில், மகான்களின் லக்ஷணங்களை விவரித்துவிட்டு, கலியில் தமது மஹத்துவத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத மஹான்களை, சாதாரண ஜனங்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விவரித்துக் கூறிய ஸ்ரீ தீக்ஷிதர், மஹான்களுக்கு உதாரணமாக நம் ஸ்ரீ மஹாபெரியவாளையே குறிப்பிட்டவுடன், அங்கிருந்த அனைவரும் மனம் உருகி ஆனந்தக்கண்ணீர் விட்டோம்.

உபன்யாசம் கேட்டு முடித்தவுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளோம். காரின் பின் பகுதியும், அதன் மேல், பிரித்து எடுத்து வெளியில் வைக்கப்பட்ட காரின் ஸ்பீக்கரையும் பின்புறத்தில் துங்கபத்ரா நதியையும் காணலாம்.

Loading

7 Responses

  1. Superb.
    But my doubt is with regard to the period mentioned in the article.
    Is it not early 1980s when Maha Periavaa came to Kurnool on HIS final leg of his Paadayatra.
    From Kurnool he returned to Tamilnadu.
    Hope I am correct on this count.

Leave a Reply to Sridhar RCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading