ஆறுமுக பெரியவா-சங்கீத சங்கரர் காஞ்சி மஹாபெரியவர்

Thanks to Sri Krishnamoorthy Balasubramanian for the post

namavali006

கவிஞர் சுப்பு ஆறுமுகம் பெரியவா சன்னிதியிலேயே (ஆசு கவிதையாக) இயற்றிப் பாடிய பாடல்..
அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை முகமொன்று
அன்பருக்கருள் கூட்டும் குருவின் முகமொன்று
செம்மையுறு இந்துமதத் தலைவர் முகமொன்று
சித்தாந்த ஒளி நல்கும் ஞான முகமொன்று
தம்மையே தாமிழந்த தியாக முகமொன்று
தாய் போலக் கருணை தரும் அன்பு முகமொன்று
நம்மிடையில் காட்சி தரும் ‘ஆறுமுக’மென்று
நமஸ்காரம் புரிகின்றோம் ‘பெரியவரை’ இன்று”

சுப்பு பாடியதைக் கேட்டு ரசித்த மாமுனிவர், முகமலர்ந்து ஆசீர்வதித்து, “அவனே ஆறுமுகம் அன்றோ? அதுதான் என்னையும் ஆறுமுகமாகப் பாடி இருக்கிறான்” என்றார்.

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading