Poem on Periyava by Sri Anand (Amruthavarshini)

namavali037
அன்பே உருவாய் அருளும்  கருணைக் கடலே
அஞ்ஞான இருள் நீக்கும்   ஜகத்குருவே [1]

நாடி வந்தோர் துயர் தீர்க்கும் தீனதயாளனே
தேடி வந்தோர் இடர் களையும்  அருட் ப்ரபாவமே  [2]

ப்ரஹ்மானந்த சாகரத்தில் அமிழ்ந்துறையும் அம்ருதவர்ஷினியே
தருமமே பூத உடல் கொண்டு சஞ்சரித்த  பூர்ண வஸ்துவே [3]

வாஞ்சையுடன் அருள் மழை பொழியும்  காஞ்சிபுர நிவாசனே
காமாக்ஷியாய் கடாக்ஷிக்கும் எங்கள்  காமகோடிபீட  குருவே [4]

தாயைப்போல அனைவருக்கும் அன்னமிட்ட  அமுதசுரபியே
சர்வ மதங்களையும் அரவணைத்த எங்கள் அத்வைதப்ரபுவே [5]

சதுர் வேதங்களையும் ரக்க்ஷித்துக் கொடுத்த நடமாடும் தெய்வமே
பாரம்பரிய கலைகளைக் காத்தருளிய  சாஸ்த்ர விற்பன்னரே [6]

கர்மனுஷ்டானங்களின் மஹிமையை உணர்த்திய கர்மயோகியே
சாமான்ய ஜனங்களையும் கடைத்தேற்றிய  ஆனந்தவாரிதியே [7]

உன் பாதாரவிந்தமே எங்கள் அரணென்று  சரணடைந்தோம்
இனி கவலை எமக்கேதென்று கண்ணீர்மல்க  தொழுது நிற்கிறோம் [8]
ஆனந்த் வாசுதேவன் (anand.vasudevan1@gmail.com)



Categories: Bookshelf

Tags:

2 replies

  1. excellent

  2. Nice Poem !

Leave a Reply

%d