திருமாலின் மார்பில் சிவலிங்க வடிவம்

Courtesy: Maalaimalar

Tirupathu_balaji

திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமியின் குறியீடான ஸ்ரீ வத்ஸம் எனும் இலச்சினையே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் உள்ள விஷ்ணுவுக்கு இக்குறியீடு வேறு விதமாக உள்ளது.

இங்குள்ள உற்சவ மூர்த்திகள் படிமங்களுள் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரர் ஸ்ரீ பார்வதி தேவியை கைப்பிடித்து திருமணம் செய்து கொள்ளும் வடிவத்தில் உள்ள மகா விஷ்ணு அந்த தேவியை சிவபெருமானுக்கு தாரை வளர்த்து தருகிறார்.

அந்த மகாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீ லட்சுமியின் ஸ்ரீ வத்ஸக் குறியீடு இருக்குமிடத்தில் சிவபெருமானின் குறியீடான சிவலிங்கம் உள்ளது. சைவ வாணவ அபேத தன்மையை இது குறிக்கிறது. இது எங்குமே இல்லாத வினோத வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Please note that the photo is not from Nellayappar Kovil.

Loading

4 Responses

  1. நெல்லையப்பர் கோயிலுக்குப் போயிருக்கோம். ஆனால் இது குறித்துத் தெரியாததால் கூர்ந்து கவனிக்கவில்லை. 🙁

  2. நெல்லையப்பர் கோவில் ஶ்ரீவிஷ்ணு புகைப்படம் கிடைக்குமா சார்?

    1. technically we will not get – we should not try to get…we should take initiatives to go there and get darshan…..digital media can only support to some extent. at some point, it should stop.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading