தலைகனம், அகம்பாவம்

We all need to read this once in a while to level-set our understanding of what we are capable of   🙂

 

Balambika

நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும்.

நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம்செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக் குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.

 

Loading

12 Responses

  1. Needy reminder. I am reminded of swami chinmayananda’s quote.. “humility is a strange value. The moment you realize you have it, you have lost it”. Best is the “arpanam” that periyava suggests.

  2. I had been to this temple at Nemili, which was installed during the period of Shri Subramania
    Iyer. HH Maha Periyava has visited that place and stayed for a couple of days for performing Puja to Shri Balambika, according to the booklet issued by the Peetam.

    I am having a Photograph of the Ambal given by the Peetam and puja is being performed
    daily at my home.

    Balasubramanian NR

  3. Some of the readers may overlook the point that this was a speech of HH Sri Mahaperivaa.

    The contents reiterate the humility and the greatness of such a remarkable Avataar . It is also a lesson to anyone who gets exaggerated opinion of oneself.

  4. ahamkaram and mamakaram are due to ego.when jiva realises that everything belongs to paramatma then the evils disappear.

    vathsal april 22, 2013

  5. Radhe Krishna,
    I am unable to read not a single word. All the letters are coming like square box. Kindly send me fresh with good font.

    Radhe Krishna,
    N. Sriram
    Calcutta
    India

    1. ok – go to your browser – look for character encoding – it may be set to western currently. change it to unicode. things should be fine…

  6. நீங்கள் கூறியது சரியே ! தலைகனமும், அஹம்பாவமும் ஒருமுறை நம் மூளையில் வீடு கட்டி விட்டால், அதை வெளியேற்றுவது மிக கடினம். அந்த அம்பாள் கிருபை இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. எல்லா புகழும் அந்த அன்னைக்கே சென்று சேரவேண்டும் என்று வேண்டி கொண்டோமானால், எல்லா காரியமும் எளிதாக முடியும்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading