Kamakshi Periyava

13 Responses

  1. Some days i happend to read an article in which it is said “One day a devotee of periyava told swamigal he is going to Kamatchi temple to do pradhakshinam,then swamigal told him to do pradhakshinam to HIM, when he performed that Swamigal immediately told him you have done pradakshinam to Kamakshi only you need not go to temple now” Our Periyava already declared He and Devi Kamakshi are one and the same”This picture just proved and confirm it.That is all.

  2. மனதைக் கொள்ளை கொள்ளும் படம். நேற்றுதான் ‘மகா பெரியவா’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்மபூஷன், பத்மஸ்ரீ பத்மா சுப்பிரமணியன் அவர்கள் மகா பெரியவாளின் கண்களைப் பார்த்தால் அன்னை காமாட்சியின் கண்களையே பார்த்தது போல். அதன்பின் காமாட்சியைத் தரிசிக்கச் செல்ல வேண்டியதில்லை என் சிலாகித்துக் கூறினார். இன்று காலை காமாக்ஷி அம்மன் சுப்ரபாதத்தை ஒலிபரப்பிவிட்டு மின்னஞ்சலைப் பார்த்தால் இந்தப் பரம கிருபாகரன், பரம தயாபரனின் கொள்ளை கொள்ளும் திருக்கோலம். இப்படியொரு அருமையான படத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நனறி.

    நேற்றைய நிகழ்வில் பத்மா சுப்பிரமணியன் குறிப்பிட்ட இன்னொரு சுவாரசியமான நிகழ்வையும் பகிர்ந்துகொள்கிறேன். அவர் சென்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த பக்தை இவரிடம் பகிர்ந்துகொண்ட தகவல் அது. பரமாச்சார்யாளை முதன் முறையாகத் தரிசிக்க அவர் ஒரு ஹோட்டலில் வந்து தங்கியிருந்த சமயம், இரு பாதிரியார்கள் இந்தோனேஷிய அம்மையாரைச் சந்தித்தனர். அவர்களும் மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என வேண்டுகோளை இவரிடம் வைத்து தங்களை அழைத்துச் செல்லுமாறு வேண்டினர். “வாருங்கள். நானும் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. சேர்ந்தே சென்று பார்ப்போம்” என காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தார். அச்சமயம் பெரியவா காஞ்சிபுரத்தில் இல்லை. எனவே, அவர் இருந்த இடத்தைத் தேடிச் சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்தது.

    அப்போது பெரியவாளே இந்த இந்தோனேஷியாவிலிருந்து வந்த அம்மையாரை அருகே வரவழைத்து, ‘இந்தோனேஷியாவிலிருந்துதானே வருகிறீர்கள் எனக் கேட்க, அந்த அம்மையார் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். ஆம் என்று கூறிவிட்டு, என்னுடன் இரு பாதிரியார்களும் தங்களைக் காண வந்திருக்கிறார்கள் என்று சொல்ல, பெரியவா எதுவும் பதில் கூறாமல், விடுவிடுவென்று அவர்களைக் கடந்துசென்று அருகிருந்த வைக்கோல் போர் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு அவர்களுக்கு தரிசனம் தந்தாராம். அவர்களோ தங்கள் பரமபிதா இயேசுவையேப் பார்த்தார்போன்று புளகாங்கிதம் அடைந்தார்களாம்.

    எவர் எவர் எதை நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அருள்வதில் காமாட்சிப் பெரியவாளின் கருணை தன்னிகரற்ற ஒன்று.

    கருணை என்னும் வாரிதியே
    காஞ்சி நகர் பெருந்தவமே

    என்ற எம்.எஸ்.ஸின் பாடல் காதில் இச்சமயம் ரீங்கரிக்கிறது.

    மேலும் சில தகவல்கள் –

    பத்மா சுப்பிரமணியன் அவர்கள் ‘எப்போ வருவாரோ?’ என்ற தலைப்பில் மகா பெரியவாள் குறித்துப் பேசியிருக்கிறாராம். இவரின் சகோதரர் பாலசுப்பிரமணியன் ‘மகா பெரியவா’ குறித்த 70 நிமிட ஆவணப்படத்தை எடுத்திருக்கிறாராம்.

    – சைதை முரளி

  3. A Very rare and Divine picturisation of “SHIVA SHAKTHI EIKHYA BHAVAM” propounded by Adya Shankara and propagated and lived as an example by MAHAPERIYAVA…..

  4. Kamakshi & Periaval are one and the same which was tacitly indicated by Maha Periaval on many occasions to His devotees. Kanch Shankara, Kamakoti Shankara

  5. According to Lalitha Sahasranamam, every ordinary human being (Kundalini) is equvalent to “Ambal”. As Kundalini (Sakthi) try to reach Saharasdhalam (Sivan) top of the head from the bottom of human form. That is what Shiva Sakthi — Kundalini meets Saharasnamam. Our MahaPeriyava both Sivan and Sakthi. Nice to see Periya in both form.

    Guru Chandrasekara Bhavan Saranam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading