* மனிதனைப் பாவத்தில் தள்ளிவிடும் சக்தி ஆசைக்கும், கோபத்திற்கும் உண்டு என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை.
* ஒருவனைப் பாவி என்று வெறுக்கும்போது, நாம் என்ன, பாவம் என்பதே செய்யாதவர்களா, என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாவச்செயல்களைச் செய்யாவிட்டாலும் மனதிலாவது நினைக்கத் தான் செய்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
* நம் கோபத்தால் எதிராளியின் குணத்தை மாற்ற முடியாது. இருவருக்குமிடையே மேலும் கோபம் வளரத் தான் செய்யும். கோபத்தால் ஒருவரைப் பணியச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. அன்பால் குறையைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சிறந்தது.
* பெரும்பாலும் கோபம் கொள்வதால் நமக்கு நாமே பெரும் தீங்கு செய்தவர்களாகிறோம். ஆத்திரம் கொள்வதால் நம் உடலும் மனமும் பலவீனமடைகின்றன.
* அன்பாக இருப்பதே நம்முடைய இயல்பான குணம். அன்பால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் ஆனந்தம் உண்டாகும். இதையே அன்பே சிவம் என்று குறிப்பிட்டனர்.
-காஞ்சிப்பெரியவர்
Categories: Upanyasam
Leave a Reply