
ஸ்ரீசங்கர பகவத் பாதர்கள் பாரததேசத்தை மூன்று முறை வலம் வந்தார். தென்னாட்டு யாத்திரையில் ராமேச்வரம், ஸேது, மதுரை, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம், முதலான பல க்ஷேரங்களில் இறைவனைக் கண்டுகளித்தார். மேற்குக் கடலோரத்தில் சந்தன மலை, கந்த (சந்தன) சைலம், கந்தமாதனம் என்று புகழ்பெற்ற குன்றில் குன்றுதோறாடும் குஹப்பெருமானைக் கண்டு ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் என்ற துதியால் துதித்தார். அருட் சக்தி மிக்க ஸ்தோத்திரமிது. காஞ்சீகாமகோடி பீடத்ததிபர் ஸ்ரீ சங்கர விஜயேந்தித்திர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் சென்னையில் சங்கராலயத்தில் 30.09.2001 அன்று நடந்த நிகழ்ச்சியில், இந்தத் துதியின் ஏழாவது சுலோகத்தின் பின் பகுதியான ‘குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜநார்திம் ஹரந்தம் ஶ்ரயாமோ குஹம் தம்’ என்பதை ஒவ்வொரு சுலோகத்தோடும் சொல்லிவர, ஒவ்வொரு சுலோகமும் மஹாமந்திரமாகி, விரும்பியதனைத்தையும் தரும் என்று உபதேசித்தார்கள். இந்தத்துதியில் குஹனாக குமாரனாக ஸ்கந்தனாக ஷண்முகனாக கார்திகேயனாக ஸ்ரீபகவத் பாதர்கள் மனம் நிறைந்து இறைவனை அழைத்து இறைவனின் பரிவை உணர்ந்து அவருடன் நேரில் பேசுவதைக் காணலாம்.
Sri Sankara Vijayendra Swamigal did the following Upadesam to Sri S.V.Radhakrishna Sastry on Subramanya Bhujangam on 30.09.2001 at Sankaralayam, Chennai. This is a powerful Slokam. If we add the second line of the 7th Slokam (i.e. guhAyAm vasantham svabhAsA lasantham, janArthim harantham shrayAmo guham tham) to each Slokam and chant, then they become Mahamantra and will shower all the desired objects.
![]()
2 Responses
thank you ,this link has explanation by a boy
SRI MAHA PERIAVA SARANAM. THE 2ND LINE OF THE 7TH SLOKAM CAN IT BE CHANTED SEPARATELY . PLEASE CONFIRM THANKS. Jai Ma Bharath.