“ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, சிவாலயங்களில் இன்று தொடங்கி நாளை உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம்.
ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். அதன்படி, 28.6.20 அன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த அபிஷேகம், காலை 7 மணி வரை நீடிக்கும். வழக்கமான நாள்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆகம முறைப்படி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்” என்று வெங்கடேச தீக்ஷிதர் தெரிவித்தார்.
சிவானந்த லஹரியில் ஆச்சாரியாள் பரமனின் ஆனந்த தாண்டவத்தை போற்றும் ஒரு ஸ்லோகத்தின் பொருளை பார்ப்போம்.–> சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை
Categories: Upanyasam
Om Namasivaya
சிதம்பரத்தில் நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இரா விடிய அபிஷேகம் குடக்கணக்கில் முடிந்து, விடியலில் ரத்ன சபைக்கு நேர்த்தியான அலங்காரங்களுடன் நர்த்தனம் ஆடி வருவது கண்கொள்ளாக் காட்சி,! மேல தாளங்களுடன், இசை விருந்து, தேவாரம் திருவாசகம் ஒதுதலுடன் கைலாயத்தில் சிவன் நர்த்தனம் எப்படி இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் புளகாங்கிதம் கொள்ள வைக்கும்.காட்சி! என்றென்றும் மனதில் நிற்கும் பேருவகை!!
ஆணித் திருமஞ்சனம், ஆதிரை நாட்கள் விசேஷமான உத்சவங்கள்!
இதனை அனுபவித்தாள் மட்டுமே புரியும்!!
இதனை சிவாணந்தலஹரி வாயிலாக பகிர்ந்தமைக்கு நன்றி கணபதி!!
ஓம் நம : சிவாய ..திருச்சிற்றம்பலம் !!
You are blessed. 🙏
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
OM NAMASIVAYA SIVAYA NAMA OM