
சிவானந்த லஹரியில் பக்தியின் மூன்று பரிணாமங்களை பல உதாரணங்கள் மூலம் விவரித்து, பக்தி என்றால் என்ன என்று வரையறுத்து கூறிய ஆச்சார்யாள், அடுத்த ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளரும் என்று இன்னொரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ஒரு அம்மா தன் குழந்தையை வளர்க்கும் போது செய்யும் உணவு ஊட்டுதல், குளிப்பாட்டுதல், ஆடை அணிவித்தல், தாலாட்டி தூங்கப் பண்ணுதல் போன்ற காரியங்களுக்கு இணையாக சிவபக்தியில் செய்ய வேண்டியவற்றை கூறி, பக்தி என்கிற அம்மா பக்தன் என்ற குழந்தையை எப்படி வளர்ப்பாள் என்று சொல்கிறார். அவற்றை அறிந்து கொண்டு, பக்தி என்ற அம்மாவை நாம் நன்றாக கவனித்துக் கொண்டால் அந்த அம்மா நம்மை ஆசையாக வளர்ப்பாள்.
அந்த ஸ்லோகத்தின் பொருளை இந்த இணைப்பில் கேட்கலாம். –> சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரை
![]()
One Response
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM