காமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும்

உகாதி பண்டிகை அன்று (25th மார்ச் 2020) பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாள் (தெலுங்கு மொழியில்) அனுக்ரஹ பாஷணம் செய்தருளிய போது, இரண்டு மூக பஞ்ச சதீ ஸ்லோகங்களுக்கு விரிவாக பொருள் கூறி, அவற்றை ஜபித்து காமாக்ஷி தேவியிடம் வேண்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அந்த ஸ்லோகங்களையும், தமிழில் அதன் பொருளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (On the occasion of Ugadi festival Pujyasri Acharya blessed us with a anugraha bhashanam (in Telugu) Where Swamiji gave detailed meaning of 2 slokams from Mooka pancha shathi and advised us to chant them and pray to Kamakshi devi. Sharing the meaning of those slokams in Tamizh below)

அதில் முதல் ஸ்லோகம், ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம்
शम्पालतासवर्णं सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किञ्चन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥
ஶம்பாலதாஸவர்ணம் ஸம்பாத3யிதும் ப4வஜ்வரசிகித்ஸாம் |
லிம்பாமி மனஸி கிஞ்சன கம்பாதடரோஹி ஸித்த4பை4ஷஜ்யம் ||
காமாக்ஷி தேவியை ஒரு சித்த மருந்தாக மூக கவி வர்ணிக்கிறார். அந்த ஸ்லோகத்தின் விரிவான பொருளை இங்கே பார்க்கலாம் – பவ ஜ்வரத்தை போக்கும் அருமருந்து

அடுத்த ஸ்லோகம், பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம்.

दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः
विनम्राणां सौम्य: गुरुरपि कवित्वं च कलयन् ।
गतौ मन्द: गङ्गाधरमहिषि कामाक्षि भजतां
तमःकेतु: र्मात: तव चरणपद्मो विजयते ॥

ததா4னோ பா4ஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
வினம்ராணாம் ஸௌம்ய: குருரபி கவித்வம் ச கலயன் |க3தௌ மந்த3: க3ங்கா3த4ர மஹிஷி காமாக்ஷி ப4ஜதாம்
தம: கேதுர்மாத: தவ சரணப3த்மோ விஜயதே ||

அதன் பொருள் –

“ததானோ பாஸ்வத்தாம்” அப்டின்னா சூரியனைப்போல ஒளி விடறது. இது அம்பாளோட பாதத்துக்கும் பொருந்தும்.சூரியன் பேர் வருகிறது.

“அம்ருதநிலய:”, அம்ருதநிலய: என்பது அம்ருதம் போன்ற கிரணங்களைக் கொண்ட சந்த்ரனுக்கு பேரு. அம்பாளோட பாதத்துல அம்ருதம் இருக்கு அப்படின்னு ஐதீகம்.

“லோஹிதவபு” பாதங்கள் சிவப்பு நிறத்துல இருக்கு, அங்காரஹன் (செவ்வாய்) சிவப்பு நிறம்.

“வினம்ராணாம் ஸௌம்ய:” நமஸ்காரம் பண்றவாள்கிட்ட அம்பாளோட பாதம் சௌம்யமா இருக்கு. சௌம்ய: னா புதன்னு அர்த்தம்.

“கு3ருரபி” அம்பாளோட பாதம் ஞானத்தை குடுக்கறதுனால கு3ருவாகவும் இருக்கு. குரு பகவானுடைய பேரும் வந்துடுத்து.

“கவித்வம் ச கலயன்” பாதம் கவிகளுக்கு நல்ல வாக்கு குடுக்கிறது. கவிங்கற வார்த்தைக்கு சுக்ர பகவான்-னு அர்த்தம்.

“க3தௌ மந்தஹ” மெதுவா நடக்கிறது பாதம். இந்த கதௌ மந்தஹ ங்கறது சனைஸ்சர பகவானை குறிக்கிறது.”

“காமாஷி தமஹ் கேது:” தமஸ்-ன்னா இருட்டு. அது ராஹு, கேதுன்னா, இருட்டுக்கு எதிரி. காமாக்ஷி பாதங்கள் அஞ்ஞானத்துக்கு எதிரியா இருக்கு. இப்பேற்பட்ட “மாத: தவ” அம்மா உன்னுடைய “சரணப3த்மோ விஜயதே” பாதபத்மங்கள் ஒளியோடு விளங்கட்டும், அப்படின்னு, காமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும் என்று பொருள்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளும் இந்த ஸ்லோகத்தை ஜபித்தால் நவகிரஹங்களும் அனுகூலமா இருக்கும்ன்னு என்று சித்திரை முதல் தேதி பஞ்சாங்க படனம் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி  ஆசீர்வாதம் பண்ணுவார்.

இந்த ஸ்லோகத்தோடு ஸ்வாமிகளைப் பற்றி மேலும் சில இனிமையான நினைவுகளைஇங்கே பகிர்ந்துள்ளேன் – ஆஸிதம் ஷயிதம் புக்தம்



Categories: Upanyasam

Tags: , , , , ,

2 replies

  1. ஆர்யா சதகத்தின் மேலே கூறப்பட்ட ஸ்லோகம் வட மொழியில் மாத்ருகை என்று கூறப்படும், ஐம்பத்தொரு அக்ஷரங்களைக் குறிப்பணவாகும்! திருவாரூரில் கமலாம்பிகை அக்ஷர சே வு
    ததானோ பாஸ்வத்தாம் பீட் நாயகியாக விளங்குகிறாள் ஸ்ரீ வித்யா உபாசகர் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.
    மாத்ருகா வர்ணங்களே தேவியாக விளங்குகிறது!
    ததாநோ வாஸ்வத்தாம் ஸ்லோகத்தில் தன்னை பூஜிப்பவர்களுக்கு அவளது திருவடித் தாமரை அஞானத்தை அழித்து ஞானம் அழிக்கும் வகையில் ராகு, கேதுவாகவும், மற்றும் நவகிரகங்களின் அத்தனை அனுகிரகத்தையும் அளிக்க வல்லதாக இருக்கிறது! சூர்யா ஒளி, சந்திரா ஒளியாக நம் அஞ்ஞானத்தை போக்க வல்லது.அருமையான தோத்திரம், விளக்கம் அதனிலும் அருமை! காமாக்ஷி பாதம் சரணம்.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading