परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् ।
परगुरुकृपया वीक्षे परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥
பரிசித கம்பாதீரம் பர்வதராஜன்ய ஸூக்ருத ஸந்நாகம் |
பரகுரு க்ருபயா வீக்ஷே பரமசிவாேத்ஸங்க மங்களா பரணம் ||
இந்த ஆர்யா சதகம் 83வது ஸ்லோகத்தின் பொருளுரை மூலம், எப்படி மஹாபெரியவா தன் குரு பக்தியினாலும் காமாக்ஷி கிருபையினாலும், காமாக்ஷி தேவியின் ஸாக்ஷாத்காரம் அடைந்து, நமக்கெல்லாம் அருள்மழை பொழிந்தார்கள் என்பதை விவரித்துள்ளேன். தைப் பௌர்ணமி அன்று காமாக்ஷி தங்கத் தேர் தர்சனம் கிடைத்தது. அந்தக் காட்சிகளையும் இந்த இணைப்பில் பகிர்ந்துள்ளேன். – குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன்
இந்த வருடமும் 23-01-2020 அன்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை வைபவம் பழூர் அக்ரஹாரத்தில் அமோகமாக நடந்தது. என்னிடம் மூகபஞ்சசதீ கற்றுக் கொண்ட வேறு 23 பேர்களிடம், 500 ஸ்லோகங்களையும் படிக்கச் சொல்லி, இந்த இரண்டாவது மூகபஞ்சசதீ மலர் மாலையை ஸ்வாமிகள் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்ந்தோம். ஸ்வாமிகள் ஆராதனைக் காட்சிகளையும் இந்த இணைப்பில் பகிர்ந்துள்ளேன் – இரண்டாவது மூக பஞ்சசதீ மலர்மாலை
Categories: Upanyasam
Leave a Reply