Simple & outstanding poem by mama…. As usual, great drawing…
Hara Hara Sankara Jaya Jaya Sankara!

மஹாபெரியவா பாடல்.
என்றென்றும் உன் திருவுருவைக் காண வேண்டும்,
எப்பொழுதும் உன் திருநாமம் கேட்க வேண்டும் !
அனுதினமும் உன் திருப்பாதம் பூஜிக்க வேண்டும்,
அருள்வாய் ஐயனே என் குருநாதனே ! …………………………………………………………………………………………………………………..1
இம்மைக்கு உகந்ததோர் வாழ்நெறி பகன்றாய்,
செம்மையும் அன்பும் அறமும் கொண்டதோர் வாழ்நெறி !
அந்நெறி தவறாமல் நான் நடக்க வரம் வேண்டும்
அருள்வாய் ஐயனே என் குருநாதனே ! ………………………………………………………………………………………………………………………2
உன் நாமம் ஸ்மரிப்பதன்றி வேறென்ன நினைவெனக்கு,
உன் உருவம் வரைவதன்றி வேறென்ன பணி எனக்கு,
உன் புகழ் கேட்பதன்றி வேறென்ன உணவெனக்கு
உன் சரணம் பற்றினேன் ஐயனே என் குருநாதனே ! ……………………………………………………………………..3
பார் முழுதும் திருப்பாதம் பதித்தவரே அருளாளா !
‘காரி’ல்லை, வண்டியில்லை, ஆகாய விமானமில்லை !
ஆதி சங்கர்தம் அருள்வழியில் சென்றவரே !
‘தெய்வத்தின் குரலி’லே வேதத்தைத் தந்தீரே ! …………………………………………………………………………………………..4
ரமணர் சேஷாத்ரி உடனுறை சங்கரா !
அன்புநெறி காட்டிய அத்வைத குருவே !
எம்மை ரக்ஷிக்க பூவுலகம் வந்த
பிரத்யக்ஷ தெய்வமே ! தக்ஷிணாமூர்த்தியே ! ……………………………………………………………………………5
மீண்டும் நீ இங்குவரும் போழ்தினிலே
அண்டி உந்தன் பணி நானும் செய்திடவே
வேண்டும் வரம் தந்திடுவாய்
தண்டம் ஏந்திய பகவானே ! …………………………………………………………………………………………………..6
நாராயணன் பாலா. 6/11/2015.