Sage of Kanchi

श्रीशिवानन्दलहरी -०१ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -01 – Sri Sivaanandalahari-01 –

எந்நாட்டாரும் அறிவு தேவபக்தி முதலானவைகளில் முதிர்வதற்கு முன்னரே முதிர்ந்து, புறமத முதலியவற்றால் எது நேரிடினும், தேவபக்தியில் குறைவுபடாது நிலைநிற்கின்ற பக்த சிரோமணிகள் எண்ணிலாரையுடைய நம் இந்து தேசத்தில், அவதாரபுருஷர்களாகிய மஹான்கள் அஞ்ஞானத்தாழ்ந்த உலகினர்க்கு ஒளிதரும் விளக்காய் வாழ்ந்து உபதேசித்து, நீங்குங்கால், அன்பினால் அளித்துச்சென்ற ஸ்தோத்திர நூல்கள் பாஷைதோறும் பல இருக்கின்றன.
ஸ்ரீமத் ஆதிசங்கராச்சாரியரவர்கள் இவ்வவனியின்கண் அமர்ந்து அஞ்ஞானத்தை நீக்கு நாளில், எவற்கும், எக்காலத்தும் பக்திரஸத்தை யூட்டுமாறு செய்தருளியதும், சொற்சுவை , பொருட்சுவை, கற்பனை, அலங்காரம், சிறந்தபாவம் முதலிய நிறைந்ததும், பக்தி ரஸம் சொட்டுவதும், படித்துப்பாடிப் பரமசிவனை பணிவார்க்கு, அவரது அன்பும் அருளும் விளைக்கவல்லதுமாகிய திவ்விய வாக்கினையுடைய ஶிவானந்தலஹரீ என்னும் இந்த ஸ்தோத்திர நூல் பற்றி தொடர்ச்சியாக இந்நன்நாளிலிருந்து சிந்திக்கவுள்ளோம் .

இந்நாள், (மார்கசீர்ஷ-க்ருஷ்ண-துவாதசி) ஸ்ரீமத் ஆதிசங்கரரின் அம்ஸாவதாரமாகவே அவதரித்து, நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்து, பாரதம் முழுதும் பாதயாத்திரை சென்று, பல லக்ஷம் பக்தகோடிகளுக்குத் தன் சாக்ஷுஷ வீக்ஷணத்தாலேயே (கடைக்கண் பார்வையால்) அருள் புரிந்து, பல துராசாரங்களை நிவர்த்தித்து, அழிந்துவிடும் தருவாயில் இருந்த பல வேத சாகைகளை மீண்டும் மலர்விட்டுத் துளிரும்படிச் செய்து, இன்றும் நமக்கு ஆச்ரயிக்க ஒளிவிளக்காய் நின்றொளிரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 31-வது ஆராதனை தினத்தில், சுப அனுராதா நக்ஷத்ரம் கூடியிருக்க, ஸ்ரீசிவானந்தலஹரீ தொடர் விளக்கத்தைத் துவங்குவோம். ஸ்ரீஆதிசங்கரரால் இயற்றப்பட்ட இந்நூலை பல்வேறு கோணங்களில் நாம் சிந்திப்பது, ஸ்ரீமஹாபெரியவாளுக்கு மிகவும் பரீத்திகரமான இருக்கும் என்பதோடல்லாமல், நமக்கும் ஆத்மத்ருப்தியைக் கொடுத்து, நாமும் சிவாநுக்கிரஹத்திற்குப் பாத்திரம் ஆவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பல சந்தர்ப்பங்களில் சிவானந்தலஹரீ ஸ்தோத்திரங்கள் இந்த blog-ல் வந்திருந்தாலும், தொடர்ச்சியாக , ஆரம்ப முதல் இறுதிவரை உள்ள நூறு ஸ்லோகங்களுக்கும், பதவுரை, அவதாரிகை, தாத்பர்யம், தெளிவுரை, கருத்துரை போன்றவை வெளிவராததால், இந்த முயற்சி ஒரு நன்முயற்சியே. நன்கு கற்றறிந்த வித்வான்களால் விளக்கப்பட்டு, தனித்தனியாகப் பிரசுரிக்கப்பட்ட புஸ்தகங்களிலிருந்து ஒவ்வொரு உரையும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில், சிவானந்தலஹரியின் ஸம்ஸ்க்ருத டீகா (ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி மடம், வாரணாசி – 1991), பதவுரை (K.ஜெகதீச ஐயர் -1935), தாத்பர்யம் (பு.ப.மாசிலாமணி முதலியார் – 1941), தெளிவுரை (ஸாஹித்ய சிரோமணி S.V.பரமேஸ்வரன் – 1976), கருத்துரை (“ஹிதபாஷிணி” ஆசிரியர் மீமாம்ஸா-சாஹித்ய சிரோமணி-விசாரத ப்ரஹ்மஸ்ரீ R.முத்துகிருஷ்ண சாஸ்திரிகள்), English explanation by Swami Tapasyananda (Sri Ramakrishna Mutt, 1985), ஹிந்தி – ஸ்வாமி ஸ்வயம்பிரகாசகிரி – ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி மடம், வாரணாசி) அவர்களின் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. ஆடியோ – Dr. M.பாலமுரளிகிருஷ்ணாவின் தேனிசைக்குரல்.

மேற்சொன்ன மஹான்களுக்கும், இந்த ஸ்தோத்திரத்தை நமக்கு உபதேசித்த கும்பகோணம் நித்யாக்னிஹோத்ரி ஸ்ரீ லக்ஷ்மிவெங்கடரமண தீக்ஷிதர் அவர்களுக்கும் நமஸ்காரங்கள். ஆச்சார்ய க்ருபை.


श्रीगुरुपादुकावन्दनम्

ऐंकार​-ह्रींकार – रहस्ययुक्‍त​
श्रींकारगूढार्थ महाविभूत्या।
ओंकारमर्म​-प्रतिपादिनीभ्यां
नमो नमः श्रीगुरुपादुकाभ्याम्॥

ஶ்ரீகு³ருபாது³காவந்த³னம்

ஐங்கார ஹ்ரீங்கார ரஹஸ்ய யுக்த
ஶ்ரீங்கார கூ³டா⁴ர்த²மஹாவிபூ⁴த்யா ॥ 1॥
ஓங்கார மர்ம ப்ரதிபாதி³நீப்⁴யாம்
நமோ நம: ஶ்ரீ கு³ருபாது³காப்⁴யாம் ॥ 2॥


श्रीशिवानन्दलहरी

कलाभ्यां चूडालङ्कृतशशिकलाभ्यां निजतपः-
फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे ।
शिवाभ्यामस्तोकत्रिभुवनशिवाभ्यां हृदि पुन-
र्भवाभ्यामानन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ

கலாப்⁴யாம்ʼ, சூடா³லங்க்ருʼத ஶஶிகலாப்⁴யாம்ʼ, நிஜதப꞉ ᳲ –
ப²லாப்⁴யாம்ʼ, ப⁴க்தேஷு ப்ரகடித-ப²லாப்⁴யாம்ʼ- ப⁴வது மே ।
ஶிவாப்⁴யா-மஸ்தோக-த்ரிபு⁴வந-ஶிவாப்⁴யாம்ʼ, ஹ்ருʼதி³ புநர்-
ப⁴வாப்⁴யா-மாநந்த³-ஸ்பு²ர-த³நுப⁴வாப்⁴யாம்ʼ- நதிரியம் ॥ (1)








Exit mobile version