Sage of Kanchi

குலதெய்வ வழிபாடு

(My family deity – Sri Bala Dhandayuthpani Swami, Kumaramalai, Pudukottai Dist.)

Yesterday, I was telling both my sons about our kula deivam temple and how that is the most critical thing in our lives. In the late evening, when I was browsing Twitter I read this article!!! I was pleasantly surprised.

Thanks to Sri அன்பெழில் for this beautiful twitter share. I believe 200% on this topic. There is no better god than our family deity. My mother was the best example for me to look up. On any day she would  say our kula deivam’s name at least 20 times. If there is anything that she wanted to pray for anything first and last stop is our kula deivam – no other god! All her prayers are still saving us. I am sure you all have seen similar thing in your families. Let us take every effort that our children continue this tradition.

#குலதெய்வம் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் பல பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதோ இன்னும் ஒன்று:

1. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
2. குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. கோடி நன்மை தரும்.
3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
4. குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
5.நம் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.
6. வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
7. நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
8. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
9. குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
10. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப் படுத்தக் கூடாது.
11. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
12. அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
13. ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.
14. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.
15. குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.
16. குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
17. குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பதற்கு ஒப்பானது.
18. குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.
19. குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.
20. துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.
21. நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.
22. குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்தவர்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோஷமாய் இருப்போம்.
23. ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.
24. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.
25. குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரப்பிரும்ம வழிபாடே என்பதினால் தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது.
26. வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபட்டாலே போதும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
27. குலதெய்வம் அசைவம் வைத்து படைக்கும் குலதெய்வமாக இருந்தால் நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம்.

ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்க வேண்டும். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர். குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

 

Exit mobile version