
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை இன்று உலகம் முழுவதும் அனைவரும் பாட, பெரும் தொண்டாற்றியவர் குருஜி ஸ்ரீ டெல்லி ராகவன் அவர்கள். திருப்புகழில் இருந்து ஒரு ஐநூறு பாடல்களை தேர்ந்தெடுத்து, அந்த பாடல்களை தகுந்த ராக தாளங்களைக் கொண்டு இசையமைத்து, “திருப்புகழ் அன்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அனைவரும் அதே ராக தாளத்தில் அந்த பாடல்களை பாடக் கற்றுக் கொடுத்தார். பஜனைகள் மூலம் மீண்டும் மீண்டும் அவற்றை பாடச் செய்தார். இதன் மூலம் அனைவரும் எளிதில் திருப்புகழ் பாடலாம் என்ற நம்பிக்கையையும், அவற்றை பாடுவதில் ஆசையையும் ஏற்படுத்தினார்.
அந்த பாடல்களை அட்டவணைப் படுத்தி, அவருடைய ஒலிப்பதிவையும் இணைத்து, பாடல் வரிகளையும் சேர்த்து ஒரு புத்தகம் போல வழங்கி இருக்கிறார்கள். திருப்புகழ் படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரிய பொக்கிஷம்.
திருப்புகழ் பாடல்கள் – குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு