Sage of Kanchi

Beautiful Tamil lines on Periyava from FB

31 Mahaperiyava Kshemama Irugo 22122013

உன் கடைக்கண் பார்வை போதுமே.. காஞ்சி சற்குருநாதா..

என் ஜென்மம் இனிதே கரையேறுமே…
“ஓரடி என்னை நோக்கி அன்புடன் நீ வைத்தால்
நூறடிநான் வைப்பே னென நேசமாய்ச் சொன்னவென்
காஞ்சி நகர் ஆளும் அரசன் சற்குருவுக்கு இந்த கடல்சூழ்
பாரிலே உண்டோ நிகர் பதிலொன்று நீயும் பகர்”
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்கின்ற
விரலானவன் நீ விரலானவன்
நிறைகளை பார்க்கின்ற குறைகளை கேட்கின்ற
குரலானவன் நீ குரலானவன்
பதற்றம் பறந்ததய்யா பரவசம் பிறந்ததய்யா
காஞ்சி சற்குருநாதா நின்னுருவம் பார்க்கையிலே !
காஞ்சி சற்குருநாதா நின் இடம் வருகையிலே !
ஓம் காஞ்சி சற்குரு நமோ நம:
ஸ்ரீ சற்குருநாதா நமோ நம:
ஜெய் ஜெய் சங்கர நமோ நம:
சற்குரு சங்கர நமோ நம:

அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா! ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த காஞ்சி சற்குரு… .ஜெய் ஜெய் சங்கர… சற்குரு சங்கர.

(posted by Hinduism)

Exit mobile version