Thanks to Sri Karthi Nagarathnam for posting this in FB…
Two things interesting about this incident – (1) Periyava’s humor (2) Sri Balu Mama/Swamigal’s courage to ask Periyava this!!! If you remember Sri Balu Mama/Swamigal’s interview, he took the courage to force Periyava to go and help the dog, which was in trouble! Knowing Periyava as Sarveswaran, he still took that courage to say this!!
ஒரு வெள்ளைக்காரர் இரவு வெகு நேரம் ஆகி தரிசனத்துக்கு வந்தார். மடத்தில் எல்லோரும் ஸ்வாமிகள் நித்ரைக்கு சென்று விட்டார் என்று சொல்லி இருக்கின்றனர்.
அவர் நினைத்த பின் யார் தான் தடுக்க முடியும்?
‘பாலு என்ன சத்தம், வெள்ளைக்காரன் வந்திருக்கானா?, உள்ளே வரசொல்லு’ என்றாராம் ஐயன்.
உள்ளே வந்து அந்த மங்கள் (மங்கல்) வெளிச்சத்தில் ஐயனை கண்ட ‘வெள்ளைக்காரன்’ பிதற்றினாராம்…
‘பால் பிரண்டன் சொன்ன தேவன் இவர் தானோ, இந்த வெளிச்சத்தை(LIGHT) எல்லாரும் நன்னா கண்ணார பார்த்துக்கோங்கோ’.
தரிசனம் முடிந்து சென்றும் விட்டாராம்.
ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்கள் பெரியவாளிடம் சொன்னார்களாம், ‘வெள்ளை காராளுக்கெல்லாம் காட்ற அந்த வெளக்கை இங்கேயும் எங்களுக்கு கொஞ்சம் திருப்பினா தான் என்ன?’.
ஐயன் தனக்கே உரிய நகைச்சுவை முத்திரை பதித்து பதில் பகர்ந்தாராம்…
‘நீ பாட்டுக்கு வெளக்கை பாத்துட்டு கிளம்பிட்டேன்னா, அப்பறம் ஒன்னையும் என்னையும் விட்டா இங்கே மடத்து ஜோலியை எல்லாம் யார் பார்க்கறது?’
நன்றி : ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் மல்லேஸ்வரத்தில் சில வருஷங்கள் முன்னர் நிகழ்த்திய உபன்யாசம்
