Sage of Kanchi

அம்மாதிரியான பைத்தியம் மற்றவர்களுக்கும் பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

I read a similar incident where some “adhiga prasangi” went and told Mahaperiyava that the then Sringeri Periyava was not behaving normal, gone mad etc. Mahaperiyava anger swelled up like a volcano and became a Rudran and blasted that devotee and talked about the greatness of the Sringeri Periyava and His elevated state. He asked the devotee to run back to Sringeri and do namaskaram and do kshama prarthanai to Him and come back. Only mahans can understand another mahan! We (the so called intellects) live and breathe just to complain!

I have posted one more incident from Bagawan Ramanar’s experiences below this article on the same lines….

Sorry folks – these all are in Tamil….

தன் நினைவு அற்றுப் பரம்பொருளின் நினைவிலேயே லயித்துவிட்ட மனோ நிலையில் திகம்பரரர்க இவ்வுலகில் சஞ்சரித்து வாழ்ந்த அவதூத புருஷர் மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்.

‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலில், முற்றும் துறந்த அவதூதரான தனது இயல்பைப் பற்றி தானே விவரிக்கும் சதாசிவ பிரம்மேந்திரர், “வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்” (சுலோகம் 57) என்று குறிப்பிடுவதிலிருந்து, அவர் ஏழை,எளிய மக்களுடன் கலந்து உறவாடியவர், அனைத்தும் கடந்த ஞானியாக இருந்தும் மக்களின் துயரம் கண்டு உருகியவர் என்னும் கருத்து மேலும் உறுதிப் படுகிறது

பஜனை சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் காஞ்சி காமகோடி பீடத்தின் 59 வது பீடாதிபதிகள் ஸ்ரீ பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் , சிவபக்தரான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள், அரசர்கள் விஜயரகுநாத தொண்டைமான், ஷாஜி சரபோஜி ஆகியோர் மகான்ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்ளின் சமகாலத்தவர்கள்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர், மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய கீர்த்தனைகளில் ‘பரமஹம்ஸ’ அல்லது ‘ஹம்ஸ’ என்ற அவரது முத்திரையும் இருக்கும்.

காமகோடி பீடத்தின் குருபரம்பரை ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 57 வது பீடாதிபதிகள். ஒருமுறை மடத்தின் பக்தர்கள் சிலர், – சதாசிவர் தெய்வீக பரவசத்தில் “மரபு ஒழுங்கின்றி” தெருக்களில் தன்னிச்சைப்படி உலவிக் கொண்டு சாதாரண மக்களுடன் பழகிக்கொண்டு, ஆடிக்கொண்டு செல்வதாக குருவான ஸ்ரீபரமசிவேந்திராளி டம் முறையிட்டனர். “சதாசிவர் ஒரு பைத்தியத்தைவிட மேம்பட்டவராக தோன்றவில்லை.” என்றனர்.

அதற்க்கு ஆச்சார்யாள் ஆனந்தமாக முறுவலித்தா ர். “அப்படியா” அவர் கூறினார், “அம்மாதிரியான பைத்தியம் மற்றவர்களுக்கும் பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?
============================================================================================
திருவண்ணாமலை சிவ குடும்பத்தின் ஐக்கியம் என்பார்கள். அப்பனாக அண்ணாமலையானும் (திருவண்ணாமலையே) சக்தி வடிவமாக ஷேஷாத்ரி ஸ்வாமிகளும், ஆனைமுகத்தோனாக கணபதி முனிவரும் குமரக்கடவுளாக ஸ்ரீ ரமணரும் ஆக சிவகுடும்பம் உள்ளதே திருவண்ணாமலை என்பார்கள்.

மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஓர் பெரிய ஞானி. பகவான் ரமணர் அவரை முற்றும் அறிந்திருந்தார். இருவரும் பல முறை சந்தித்து கொண்டார்கள். பகவான் ரமணர் சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி வைபவத்திற்கு சென்று பல மணி நேரம் இருந்து சமாதி வைபவத்தை முடித்து வைத்தார்.

பகவான் ரமணர் வேடிக்கையாக சொல்வது: “திருவண்ணாமலையில் மூன்று பைத்தியங்கள் இருக்கிறார்கள். ஒன்று சேஷாத்ரி, இன்னொன்று நான் மூன்றாவது அருணாச்சலேஸ்வரர், ஏனென்றால் அருணாச்சலேஸ்வரர் ஒரு பாகத்தையே பெண்டாட்டிக்கு கொடுத்து விட்டார்.”

ஒருமுறை ஸ்ரீ ரமணருக்கு உடல் நலம் குன்றி இருந்தபோது அன்பர்கள் அவருக்காக ஒரு சோஃபா கொண்டு வந்து போட்டார்கள். ஒரு அன்பர் தயங்கித் தயங்கி , “இது சோஃபா“என்றார்.

அதற்க்கு பகவான் ரமணர் சொன்னது ,” இது சோஃபா. உட்கார்ந்தால் சுகமா இருக்கும். எனக்கு தெரியாதா ? நான் என்ன சேஷாத்ரி சுவாமிகளா …..உடம்பை மறந்து இருக்க”

Exit mobile version