
கோகுலாஷ்டமி அன்று, மஹாபெரியவா கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடம் பாகவதம் கேட்பார் என்ற அளவில் காதில் விழுந்து இருக்கும். ஸ்வாமிகளுக்கு முன்னால் மஹாபெரியவா, இது போல மாயவரம் சிவராமகிருஷ்ண சாஸ்ரிகளிடம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் கேட்டு இருக்கா. ஸ்வாமிகளும் பெரியவாளும் அந்த ஸப்தாஹத்தை, முக்யமாக அந்த கோகுலாஷ்டமி அன்று ஸப்தாஹ பூர்த்தியை எப்படி ஒரு பெரும் தவமாக பண்ணினார்கள் என்று விவரங்களை தெரிந்து கொண்டால் வியப்பில் மூழ்கி விடுவோம். அப்படி இந்த மஹனீயர்களின் தியானத்தை நாம் செய்தால், அந்த புண்யம் நமக்கு கிடைக்கும், கிருஷ்ண பக்தி வரும்.-> மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்