
“ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, சிவாலயங்களில் இன்று தொடங்கி நாளை உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம்.
ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். அதன்படி, 28.6.20 அன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த அபிஷேகம், காலை 7 மணி வரை நீடிக்கும். வழக்கமான நாள்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆகம முறைப்படி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்” என்று வெங்கடேச தீக்ஷிதர் தெரிவித்தார்.
சிவானந்த லஹரியில் ஆச்சாரியாள் பரமனின் ஆனந்த தாண்டவத்தை போற்றும் ஒரு ஸ்லோகத்தின் பொருளை பார்ப்போம்.–> சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை