
சைவ சமய குரவர்களான (குரு என்ற சம்ஸ்கிருத பதத்தின் பன்மை குரவ: அதைத்தான் தமிழில் குரவர்கள் (guravargal) என்று சொல்கிறோம். குறவர்கள் (kuravargal) என்று சொல்லிவிடக் கூடாது.) திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயம் தழைக்க வந்த அவதார மகான்கள் ஆவர்.
மஹாபெரியவா தன்னுடைய உபன்யாசங்களில் நால்வர் அருளிய தேவார, திருவாசகத்தில் இருந்து நிறைய பதிகங்களை மேற்கோள் காட்டி பேசி இருக்கிறார்கள். ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு அவற்றைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள்.
இன்று மஹாபிரதோஷம். சிவனடியார்கள் ஆன இந்த நால்வரின் சரித்திரத்தை கேட்டு மகிழ்வோம் –>
சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம்