
தன்னுடைய வேதாந்த புத்தகங்கள் மூலம், உலகின் தன்னிகரற்ற ஞானச் சிகரமாக கொண்டாடப்படும் நம் ஆசார்யாள், தம்முடைய பக்தி கிரந்தங்களில், பலவித யுக்திகளை உபயோகப்படுத்தி , பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விஷயங்களை விளக்குகிறார்.
சிவானந்த லஹரியில் உபமா அலங்காரம் எனப்படும் உவமைகளைக் கொண்டு கருத்துக்களை தெளிவுபடுத்தும் யுக்தி நிறைய காணப்படுகிறது. பக்தி என்றால் என்ன என்ற அடிப்படை கேள்விக்கு மூன்று ஸ்லோகங்களில் ஆச்சார்யாள் விளக்கமளிக்கிறார். ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஏழெட்டு உவமைகளைச் சொல்கிறார். அதன் மூலம் பக்தியின் மூன்று பரிணாமங்களைச் சொல்லி, அந்த மூன்றும் அமைந்தால் தான் அது உத்தம பக்தி என்பதை அழகாக புரிய வைக்கிறார். அவற்றின் பொருளை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
சிவானந்தலஹரி 59வது ஸ்லோகம் பொருளுரை
சிவானந்தலஹரி 60வது மற்றும் 61வது ஸ்லோகம் பொருளுரை
இதில் ‘அங்கோலம் நிஜபீஜ சந்ததிஹி’ என்ற ஸ்லோகத்திற்கு மஹாபெரியவா அளித்துள்ள அற்புதமான விளக்கத்தையும் இணைத்துள்ளேன்.