Sage of Kanchi

Know the law – தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947 Section 8 & 9

Thanks to Sri T.R Ramesh for the FB share. Some of you might recall that once in a while I post about my irritation on filming in hindu temples and the level of impurities that they leave behind both literally and figuratively. I had always wondered why someone can’t file a PIL against this practice. Luckily, there seems to be a act in TN to prohibit this.

All we need to do is to file a complaint in the police station when we see any filming in temples.

Thanks Sri Ramesh for educating us on this topic!

500 வருடங்கள் பழமையான மைலாப்பூர் ஸ்ரீ கேசவப் பெருமாள் திருக்கோயிலில் சினிமா படமெடுக்கின்றனர் எனச் சில பக்தர்கள் இன்றுக் காலைத் தொடர்பு கொண்டுத் தெரிவித்தனர்.

கோயிலுக்குச் சென்றுப் பார்த்ததில் கோயில் மேலக் கோபுரம் அருகில் மதிலை உடைத்து உருவாக்கிய வாயில் வழியாகச் சென்று ஒரு மிக நீண்ட பஸ் கோயில் உள்ளே நின்று கொண்டு இருந்தது.

அந்தப் பஸ்ஸில் இருந்து மின்சாரம் கொடுக்கப்பட்டு கோயில் உள்ளேயும் வெளியேயும் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இந்தக் கோயில் தென்கலைச் சம்பரதாயக் கோயில். உத்தமர்கள் துறை கண்காணிக்க மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அந்த அருமையானத் தீர்ப்பைத் மிகத் தவறாகப் பயன்படுத்தும் சில அறங்காவலர்கள்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சேவார்த்திகள் மட்டுமே படபிடிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. சுதரசன் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

அவர் விரைந்து சென்னை இணை ஆணையர் மூலம் நடிவடிக்கை எடுத்தார். படபிடிப்பிற்கு வந்தக் கூட்டம் பஸ்ஸை எடுத்துக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறியது.

கோவிலில் பாடப்பிடிப்பு என்பது “தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947″ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் 8,9ற்கு விரோதமானவை என்பதைப் பக்தர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டு, திருக்கோயில்களில் படப்பிடிப்பு காண நேரிட்டால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரி ஓம்

Exit mobile version