Thanks to Smt Saraswathi Thiyagarajan Mami for this share….I am posting this not to play my own drum-beats but to share how this blog has been directly/indirectly answering questions/blessing devotees in so many ways! It is important that we maintain the sanctity of this blog/temple by serving with utmost humility and bakthi….
Getting darshans of mahans (even via dreams) is a great blessing – a recognition to our bakthi or an indication for something that is going to happen with their guidances. While science can say that that dreams are triggered through subconscious mind’s pre-registered thought, our experiences can’t be properly explained by science also!
I feel very happy for this devotee!
Our namaskarams to these Mahans….

Following is the exact posting of Mami in Facebook – I haven’t edited anything.
நான் வைஷ்ணவனான போதிலும் பெரியவா, சிவன் ஸார் இவர்களிடத்தில் மிக்க மரியாதையும் பக்தியும் உடையவன்.
இவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் செவிவழிச் செய்திகளாலும், நெட்ல் படிக்கும் பல விஷயங்களாலும்,யூ ட்யூப், Sage of Kanchi மஹேஷ் க்ருஷ்ணமூர்த்தி நடத்தும் ப்ளாக் வழியாகவும் பெரியவா பற்றி அரிய பெரிய விஷயங்களை அறியும் மகத்தான பேறு அடைந்திருக்கிறேன் என்றால் மிகையாகாது.
சில மாதங்களுக்கு முன் நான் பெங்களூரிலிருந்து காலடி சென்று கொண்டிருந்தேன் என் சொந்த வேலையாக. ரயிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த எனக்கு திடீரென விழிப்பு போன்ற ஓர் நிலை. நான் சாதாரணமாக இரவு படுத்தால் காலை வரை நன்றாக உறங்கும் பழக்கம் உடையவன்.
அறைகுறைத் தூக்கத்தில் காட்சி மட்டும் தெளிவாகத் தெரிகிறது சிவன் ஸார் ஒரு தலை வாழை இலை எதிரில் உட்கார்ந்திருக்கிறார் பஞ்ச பக்ஷ்யம் அன்னம் பறிமாறப்பட்டிருக்கிறது. நான் நினைத்துக்
கொள்கிறேன் ‘சிவன்ஸார் கைவிரல்களால் அளைந்து சில பருக்கைகள் மட்டும் உண்ணும் பழக்கம்
உடையவர் என்று படித்திருக்கிறோமே இப்படி இலை நிறைய பலவகை பதார்த்தங்களுடன் பறிமாறி அதன் முன் உட்கார்ந்திருக்காரே இது எப்படி ஸாத்யம்’ என்பதாக. அவர் இலைக்குப் பக்கத்தில் அதுபோல் இன்னொரு இலை!
ஆனால் அதன் எதிரே யாரும் உட்காரவில்லை. ‘இது ப்ராம்மணார்த்தம் போல் தோன்றுகிறதே
யாருக்குத் திதி’ என்று.
என் மனசைப் படம் பிடித்தாற்போல் சிவன் ஸாரிடமிருந்து மெல்லிய குரலில் பதில்!
என்ன என்று யூகிக்க முடியுமா?
சிவன் ஸார் ம்ருதுவான குரலில் ”ஆங்கரைப் பெரியவா’ என்று சொல்கிறார் என்னிடம்!
ஏனக்கு ஆங்கரைப் பெரியவா பற்றி ஒன்றுமே தெரியாது! உடனே தெரிந்து கொள்ளும் ஆவலில்
என் கைபேசியில் கூக்ல் செய்து அவரைப் பற்றி விஷயம் அறிய முற்படுகிறேன் அந்த இரவு வேளையில்!
தேடும்போது உடனே கிடைத்தது Mahesh Krishnamoorthi’s Sage Kanchi blog! அதுவும் என்ன? அன்று ஆங்கரைப் பெரியவாளின் ஆராதனை தினம் என்று!
ஏன் வியப்புக்கு எல்லையில்லை.
என்னையும் ஒரு பொருளாக நயந்து வந்து என்னிடம் இந்த மகத்தான தகவலை சிவன் ஸார் சொன்னது
எனது பெரும் பேரன்றி வேறல்ல.
Mahesh krishnamoorthi தன் ப்ளாக் மூலம் பல பேருக்கு நிறைய தெரியாத விஷயங்களை
பகிர்ந்தளிக்கிறார். இதனால் எம் போன்ற ஒன்றுமே விஷயம் தெரியாத புரியாத மனிதர்களுக்கும் பெரியவா ..சிவன்ஸார் அருள் கிடைக்கிறது எங்கள் பாக்யம்!
ஜய ஜய சங்கரா சங்கரா….
மேற் சொன்ன சம்பவம் இன்று என்னைக் காண வந்த பெரியவா பக்தரின் அனுபவம்!