
Thanks to Sri Ganapathy for the article. Keshav has done a fantastic job, as usual!
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னோட பாகவத படனத்துக்கும், பாகவத ப்ரவசனத்துக்கும் மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள்னு ஒரு மஹானை ‘மானசீக குருவா’ வெச்சுண்டு இருந்தார் … மாயவரம் பெரியவான்னு சொல்லுவா “எனக்கு அவர் கிட்ட தான் ஹீரோ worship!” அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார்.
அந்த நாள்ல மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகள்னு ஒருத்தர் இருந்தார். அவர் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு வேதம் சொல்லிக் கொடுத்துண்டு இருந்தார். ஆயிரக் கணக்கான வேத பண்டிதர்களை உருவாக்கி இருக்கார். அவருக்கு ‘மஹா மஹோபாத்யாயா’ன்னு இங்க்லீஷ்காரன் விருது கொடுத்த போது டெல்லிக்கு வர சொன்னானாம்.
“எனக்கு நேரமில்லை. அனுஷ்டானம் இருக்கு!” அப்படீன்னு சொன்னாராம்.
“தஞ்சாவூர் ல வந்து வாங்கிக்குங்கோ” அப்படீன்னு சொன்னப்பவும்
“இல்லையில்லை…நேரமில்லை” னு சொல்லிட்டாராம்.
அப்புறம் அவர் ஆத்துக்கே வந்து கொடுத்தாளாம்.
அப்படிப்பட்ட மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளை “மன்னார்குடி பெரியவா”ன்னு மஹா பெரியவாளே கூட பேரைச் சொல்லாம refer பண்ணி பேசியிருக்கா.
For more, please read here