Sage of Kanchi

ஸ்ரீமஹாபெரியவா திருத்தண்ட மாறல் – Guru Poornima Special from Saanu Puthran

Chicago Periyava - decorated.jpg

Thanks to Sri Suresh. Like you all know, he has the poorna kadaksham of Saraswathi and Mahaperiyava that poems just flow like a waterfall from him….He is blessed – we are all blessed to read these poems.s

Wish you all the bests Suresh…Keep writing and keep sharing….
பெரியவா சரணம்

ஸ்ரீ சிவ-பார்வதி மைந்தனாம் ஸ்ரீசுவாமிநாத குருவைப் பாடிய அருணகிரியாரின் வேல் வகுப்பினை, சுழற்சியின் முறைக்கேற்ப சக்கர வியூகமாகப் பாடி “வேல் மாறல் மந்திரம்” எனத் தந்தருளிய வள்ளிமலை ஸ்ரீ ஸச்சிதானந்த ஸ்வாமிகளுடைய அடி போற்றி வழி பேணி இன்றைய அனுஷத் திருப்பொழுதிலே நம் ஸ்ரீ ஸ்வாமிநாத குருவான காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் திருத்தண்ட வகுப்பாகப் பாடி “ஸ்ரீமஹாஸ்வாமி திருத்தண்ட மாறல்” எனும் மந்திரந்தனை தண்டக மண்டலத்தையும் (காஞ்சி மாநகருக்கு உரித்தான வேறு பெயர்களுள் தண்டகபுரம், அதாவது தொண்டை நாடு எனும் பெயரும் வழங்கப்படுகிறது), தண்ட- கமண்டலத்தையும் போற்றி திருவருள் பெறுவோமே, அன்பர்களே! எல்லாம் வல்ல ஆச்சார்யர்களின் அருளாலே வளமோடு வாழ ப்ரார்த்திப்போம்!!

பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா அபயம்!

குருவடி தொழுவோம்; குறைவின்றி வாழ்வோம்!
குருவுண்டு – பயமில்லை ; குறையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

Exit mobile version