Thanks to Sri Ganapathy for the share….
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017) திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார். மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா.
ஒரு வாட்டி பெரியவா உட்கார்ந்து பாகவதம் கேட்டுண்டு இருக்கா. அப்போ சுத்தி இருக்கும் ஜனங்கள் எல்லாம் பேசிண்டு கொஞ்சம் சத்தம் பண்ணிண்டு இருக்கா. பெரியவா காசிக் கண்ணன் என்கிறவரிடம் ‘கொஞ்சம் புண்டரீகம் போடுங்கோ’னு சொல்றா. அவர் எழுந்து ‘கோபிகா ஜீவன ஸ்மரணம்’ னு சொன்ன உடனே எல்லாரும் ‘கோவிந்தா…. கோவிந்தா….’ னு சொல்றா. அப்ப பெரியவா சொன்னாளாம் ‘ஆயுசே கொஞ்சம். அதுல தூக்கத்துல, மத்த கார்யங்களில் பொழுது போயிடறது. கொஞ்சம் பாகவதம் கேட்டு புண்யம் தேடிக்கலாம்னு பார்க்கறேன். எனக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்கோ. சத்தம் போடாதேங்கோ. நீங்கள் எல்லாமும் பெரியவா கிட்ட பாகவதம் கேளுங்கோ’ அப்படின்னு சொன்னாளாம்.
[Click here to read more]

