
‘ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா’ என்ற [தைத்திரீய ஆரண்யக வாக்குப்] படி ஆயிரம் ஆவிருத்தி காயத்ரீ ஜபிப்பது உத்தமம்; நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து. காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸூரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனத்துக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வதீ என்று மூன்று பிரகாரமாகத் தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Thaithriya Aaranyakam tells doing one thousand Gayathri Japam is good, one hundred is moderate. One should atleast chant atleast ten times as bare minimum. Even in times of misfortune the Gayathri must be muttered at least ten times at dawn, midday and dusk. These are hours of tranquility. At dawn all creatures including human beings rise and the mind is serene now. At dusk all must be restful after a day’s hard work: that is also a time of calm. At noon the sun is at its height and people are at home and relaxed and their mind is calm. During these hours we must meditate on Gayathri, Savitri and Sarasvati. In the morning the dominant presence is that of Brahma, at noon that of Siva and at sundown of Vishnu. So we must meditate on Gayathri in the morning as Brahma personified, at noon as Siva personified and at dusk as Vishnu personified. – Pujya Sri Kanchi Maha Periyava