We envy poets for bringing out great words out of their poems that touch our hearts. It is a gift from God even if it is a for cinema songs. Penning a poem about on Periyava isn’t possible without His blessing. Here Suresh has done a very difficult poem similar to what Sri Pathanjali saint has done on Nataraja. Very very difficult to even think along those lines – Periyava wrote this through Suresh – what else to say! Absolutely brilliant!
Thanks Suresh for sharing!
பெரியவா சரணம்.
சம்பூ சங்கரி பரம க்ருபாகரி அபர காமாக்ஷீ பாலயமாம்!
ஸ்ரீ பதஞ்சலி யோகமுனியின் கரம் பிடித்தபடியாக ஸ்ரீசரணாளான ப்ரத்யக்ஷ பரமேஸ்வர பரமேஸ்வரி ஸ்வரூபத்தை வலம் வந்து சரண்புகுந்த பாடலின் பகிர்வு.
முதன்முதலாக எழுத எண்ணிய எண்ணத்திற்கு வார்த்தைகளைத் தேடித் தவித்த அனுபவத்தினைத் தந்த பாடல். பதஞ்சலி சம்பு நடனத்தைப் பாடியது போலே ஐயனின் அனுக்ரத்தின்படியாக கால், கொம்பு இல்லாத எழுத்துக் கோர்வை கொண்டு அமைக்க சிரத்தையுடனான முயற்சி.
பா:
கதம்பவன நந்தனவ னஞ்சுக அகம் பவள மஞ்சுள மனந்தன பதம் !
அகண்டபர மந்தகர ணஞ்சுக மகம் வளர மஞ்சுக மனந்தன பதம் !
சதம்பதக மந்தரம கந்தர சுகம் சரண பஞ்சசக மனந்தன பதம் !
தனந்தரு மனந்தன மகந்தரு பதம் வதன மஞ்சசர சுகந்த சரணம் !
பதம்:
கதம்பவன நந்தனவன் அஞ்சுக அகம் பவள மஞ்சுளம் அனந்தன பதம்
அகண்ட பரம் அந்தகரணம் சுகம் அகம் வளர மஞ்சுகம் அனந்தன பதம்
சதம் பதகம் அந்தரம் கந்தரம் சுகம் சரண பஞ்சகம் அனந்தன பதம்
தனம் தரும் அனந்தனம் அகம் தரும் பதம் வதனம் அஞ்சர சுகந்தம் சரணம்.
பொருள்:
கதம்பவன நந்தனான பரமேஸ்வரனின் அழகிய ஹ்ருதய கமலத்திலே பவள மஞ்சுளமாக ஒன்றியிருக்கும் பரமேஸ்வரியை ஒருசேர த்யானித்து, அளவிலமுடியாத அந்த பரத்தினை அந்தகரணத்திலேற்றும் சுகம் எம்மில் நிறைய அந்த பதத்தினை ஸ்மரிக்கையில், வான்மேகங்களினூடே யிருக்கின்ற நூற்றுக்கணக்கான நக்ஷத்திரங்களின் ஒருமித்த ஒளியின் சுகம் போலே ப்ரமிப்பூட்டும்படியான அவர்களது பாதாரவிந்தங்கள் தருகின்ற ஆனந்தத்தை மனதிலே பெற வேண்டி அழகான, என்றுமே மாற்று குறையாத அந்த சரணாரவிந்தங்களிலே சரணடைவோமாக.
கடையேனின் சிறிய முயற்சி. எள்ளளவேனும் இனிது இருக்குமேயானால் சத்யமாய் ஐயனின் கருணையே யன்றி வேறேதிருக்க முடியும்..?!!!
சிவபார்வதி அவதாரமான ஸ்ரீசரணாள் பாதாரவிந்தங்காலிலே அனைவரின் நலன் வேண்டியும் பணிந்து ப்ரார்த்திக்கின்றேன்.
பெரியவா கடாக்ஷம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்
