Sage of Kanchi

Poem and a painting by Shr BN Mama

Mama is clearly multi-faceted. Thanks mama for sharing this…


MahaPeriava Standing - Painting BN

 

 

சித்தம்  உன்னிடம்  நிலைத்திடவே
நித்தம்  உனை  நாம்   ஸ்மரித்திடவே
பித்தமும்  பயமும்  ஓடிடவே
தித்திக்கும்  உன்  நாமம்  சொல்லிடுவேன்.
நெஞ்சமும்  நினைவும்  நீயே
கொஞ்சமும்  குறையாத  அருளும்  நீயே
வஞ்சமின்றி  சுரக்கும்  அன்பும்  நீயே
கெஞ்சுகிறேன்  அருள்  பாலி  அன்புத்  தெய்வமே.

அந்தமும்  ஆதியும்  இல்லாதவனே
பந்தங்கள்  அறுத்திடுவாய்  காமகோடி  தெய்வமே
சிந்தனையும்  செயலும்  நீயே  என்  குருவே
வந்தனை  செய்கிறேன்  வரமருள்  பகவானே.
தித்திக்கும்  உன்  நாமம்  என்றும்  செப்பிடுவேன்
எத்திக்கு  நோக்கினும்  நின்னையே  கண்டிடுவேன்
வந்திக்கும்  கரங்களைக்  காத்திடுவாய்  இறைஞ்சுகிறேன்
சந்திரசேகரனை  சிரம்  தாழ்த்தி  வணங்குகிறேன்.

Exit mobile version