செல்வம் புகழ், பொருள்,ஆயுள் எல்லாம் வேண்டுந்தான் ஆனால் முக்கியமாக
ஆரோக்யம் வேண்டும் என பெரியவாளிடம் ப்ரார்த்தித்தேன். ‘புரணா பாராயணங்களைச் செய்ய எனக்கு நேரமில்லை, எனவே எளிதாக செய்யக் கூடிய முறையைச் சொல்லணும்”. என ப்ரார்த்திக் கொண்டேன்.
சட்டென்று ஒரு உபதேசம்!
‘ஓம் நமோ பகவதே சூர்ய நாராயணாய நம: ||
தினமும் இதைப் பன்னிரண்டு தடவை சொல்லி கிழக்குப் பார்த்து, பன்னிரண்டு நமஸ்காரம் பண்ணு..”
பெரியவாளின் உத்தரவுபடி செய்து எங்கள் குடும்பத்தில் எல்லாரும் நோய் நொடியில்லாமல் சௌகரியமாக இருக்கிறோம் என்று சொல்வது திருமதி கீதா துரை ராஜ் சென்னை.
தகவல்–கோதண்டசர்மாவின் தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதி.
