This is bakthi! This bakthi is similar to gopika’s bakthi towards Lord Krishna….They wanted to see Krishna in person all the time…
பெரியவா ஒருமுறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு வயதானவர் அவர் பின்னாலேயே ஓடி வந்தார். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியவா அவருக்காகவே நின்றார்.
அவரும் பழம், புஷ்பங்களை பெரியவா காலடியில் வைத்து தரிசனம் செய்தார். அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவர் என்றதும் பெரியவா, “நான் இத்தனை நாள் அங்கே தானே இருந்தேன். அங்கேயே பார்த்திருக்கலாமே! எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு என் பின்னாலே வரணும்” என்று கேட்டார்.
அதற்கு அவர், “நான் அங்கேயும் பார்த்தேன். அதனால் தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வரேன்” என்றார். இப்படிச் சொன்ன பெரியவர் ஓர் இஸ்லாமியர்!
மேலும் அவர், “என்னையும் மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்; எதைச் சொன்னாலும் செய்வேன். உங்கள் அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்!” என்றார்.
சிரித்த படியே பெரியவா, “உனக்கு என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கணும்னு தோணித்து என்றால், நீ இருக்கும் இடத்திலேயே இருந்து என்னை நினைத்துக் கொள். உன் நினைவில் நான் வந்தால் உன்னோடு இருப்பது போல் தானே! அதற்காக மடத்திலெல்லாம் சேரவேண்டாம்” என்றார்.
பெரியவருக்குக் கண்ணீர் பெருகியது. “எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித் தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!” என்று கண்ணீர் பெருக கூறினார்.
சாட்சாத் பரப்பிரம்மம் நம் பெரியவா!
Thanks Yogita for FB share….
