ஶ்ரீவித்யா காமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் :
SrividyA KamakshI LalithA Maha Tripurasundari Vaibhavam:
த்ரிபுரா ரஹஸ்யத்தின் மாஹாத்ம்ய காண்டத்தில் மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து, பின் அவர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களை இயற்றும் ஆற்றல் அளித்து, பின் அவர்கள் ப்ரார்த்தனைக்கிரங்க சிதக்னி குண்டத்தில் உதித்து (அந்தர்முகமான மஹாயாக க்ரமத்தால்), ஶ்ரீலலிதா மஹேஶானியாக ஶ்ரீதேவி தர்ஶனமளித்து, பின் காமகாமேஶ்வராளாக தர்ஶனமளித்த வைபவம் விஷேஷமாக ப்ரவசனத்தில் கூறப்படுகிறது. மேலும், மஹாபாபிக்கும் கூட காஞ்சிபுரத்தில் விளங்கும் ஶ்ரீமாதாவான காமாக்ஷி பரதேவதை முக்தியளித்த சரித்ரமும், ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் கருணையும் விவரிக்கப்படுகிறது
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்

