
ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்யமந்தக மணி உபாக்யானம் என்ற ஒரு பகுதி வருகிறது. மஹாபெரியவா தெய்வத்தின் குரல் நான்காம் பகுதியில், இந்த கதையை விஸ்தாரமாக சொல்லி இருக்கிறார்கள். விநாயக சதுர்த்தி அன்று இதை படிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஸ்வாமிகளும் பாகவத பிரவசனத்தின் போது இந்த கதையை அழகாக சொல்வார்கள். அவற்றைக் கேட்டு, என் ஆசைக்கு நானும் அந்தக் கதையை சொல்லி இருக்கிறேன். இந்த கதையைக் கேட்டால் நமக்கு மனத்தெளிவு ஏற்படும். செய்யாத தப்பிற்கு கெட்ட பெயர், அதாவது அபவாதம் விலகும் என்ற பலச்ருதி சொல்லப் பட்டிருக்கிறது.இந்த இணைப்பில் ஸ்யமந்தகமணி
உபாக்யானத்தை என் குரலில் கேட்கலாம்.–>
ஸ்யமந்தகமணி உபாக்யானம்
ஸ்ரீமன்நாராயணீயத்தில் இந்த கதையை எண்பதாவது தசகத்தில் பட்டத்திரி பாடியிருக்கிறார். அதன் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம்.–>நாராயணீயம் எண்பதாவது தசகம் ஒலிப்பதிவு; Narayaneeyam 80th Dashakam audio mp3