Sage of Kanchi

Mahaperiyava Aradhana Special from Sri Ganapathy Subramanian

Beautiful article written by Sri Ganapathy.

உலகம் முழுக்க நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடறோம். “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”, அப்டீன்னு கச்யப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானுடைய அவதாரத்தை பத்தி கந்த புராணத்துல பாடின மாதிரி, ஸ்வாமிநாதனா வந்து அவதாரம் பண்ணி தர்ம செங்கோலை வெச்சுண்டு நூறு வருஷம், அருளாட்சி பண்ணிணா பெரியவா. மஹாபெரியவாளை நினைக்கறது, பூஜிக்கறதுனால நமக்குதான் க்ஷேமம். அவருக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. அவரை தியானம் பண்ணோம்னா, அவரை கொண்டாடினோம்னா நமக்கு இக பர சௌபாக்யங்கள் எல்லாமே கிடைக்கும்.

கலியோட பிரவாகத்தை தடுத்த ஒரு மகான். ரிஷிகள் கூட சத்தியத்தையும் தர்மத்தையும் ஒரு ஆபத்து காலத்துல விட்டு குடுக்கலாம், ரிலாக்ஸ் பண்ணலாம்னு சொல்றா. ஆனா கொஞ்சம் கூட ரிலாக்ஸ் பண்ணாம, அன்னிக்கு ராமாவதாரத்துல ராமர் எப்படி சத்தியத்தையும் தர்மத்தையும் கடை பிடிச்சாரோ அப்படி கடை பிடிச்ச ஒரு மகான்.

குழந்தைகளுக்கு கதை சொன்னோம்னா, “இந்த கதை தெரியும்ப்பா. வேற ஏதாவது புது கதை சொல்லுங்கோப்பா”, அப்டீன்னு கேப்பா. அந்த மாதிரி மஹாபெரியவாள பத்தி புதுசா எதாவது சொல்லுங்கோளேன்னு கேக்கறா. அதனால இன்னிக்கு புதுசா ரெண்டு விஷயங்கள் சொல்றேன். ரெண்டு அனுபவங்கள்.

Click here to read more

Exit mobile version