For those who know about Mahaperiyava and His karunyam we can convince that these coincidences are because of our bakthi to Him. In this particular case, it is astounding! This couple does not even know Him before this incident – they don’t know Sankara Matam, they dont know orikkai, they dont know His purvashrama Nama etc. What more we need to connect pure bakthi to anugraham.
Mahaperiyava padham potri!
Thanks to Sri Bhavaneswaran for the FB share
எங்களுக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை, ஒரு நாள் ஒரு நண்பர் பெரியவா திருஉருவம் கொண்ட புகைப்படம் கொடுத்து நீங்கள் ஒருநாள் பெரியவா சந்நிதி போய் பார்த்து வேண்டுகோள், அருள்புரிவார் என்று சொன்னார். நானும் என் மனைவியும் காஞ்சி சென்றோம். எங்களுக்கு சங்கர மடம் பற்றியும் தெரியாது. ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பெரியவா கோயில் போகவேண்டும் என்றும் , அவர் எங்களை பெரிணி மண்டபம் இருக்கும்( ஓரிக்கை) அழைத்து சென்றார்.
பகல் 11.00மணி என்பதால் கூட்டம் இல்லை. பெரியவாவை அகம் குளிர , மனம் உருகி , கதறி அழுது குழந்தை பாகம் பெற அருளுமாறு கேட்டுக்கொண்டும், பாதம் வணங்கி வேண்டி மீண்டும் மீண்டும் கேட்டுகொண்ட இருந்தோம்.
அரை மணி நேரம் நீடித்தது, பிறகு புறப்புட்டு முன்பக்கமந்தோம். பெரியவர் ஒருவர் “தம்பி உள்ளே போங்க பிரசாதம் இருக்கு வாங்கி சாப்பிட்டு போங்க” என்றார். என் மனைவியிடம் “இனி நீ அழாதே!!!” என்றார்.
நாங்கள் குருக்களிடம் சென்று பிரசாதம் வாங்கி சாப்பிடும் போது கோவில் ஊழியர் ஒருவர் “என்ன சாமி கொஞ்சம் நேர முன்னாடி பெரிய கோடிஸ்வரர் வந்த போது பிரசாதம் இல்லை சொன்னிங்க இப்ப எப்புடி” என்று சிரித்தார்.
குருக்கள் சொன்னர் “பெரியவா உத்தரவு கொடுக்க சொல்லி!”
பிறகு சங்கர மடம் வந்தோம்.
பெரியவர் அதிஷ்டானம் வந்து வேண்டி ஊர் வந்தோம். சரியாக ஒரே மாதம் மனைவி கருவுற்றார். பெரியவா அருள் கிடைத்தது. அழகிய மாணிக்கம் போல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எனது குடும்பம் கொண்டாடியது பெரியவா சித்தமே சித்தம் என்று.
கொண்டாட்டம் நீடிக்க வில்லை. குழந்தை நல டாக்டர் ஒருவர் “குழந்தைக்கு இதயத்தில் சிறிய ஓட்டை ஒன்று உள்ளது , ஒரு டெஸ்ட் ஸ்கேன் எடுத்துவிட்டு பெரிய டாக்டரை பாருங்கள்” என்றார்.
டெஸ்ட் எடுத்து ரிபோர்ட் காட்ட சென்றேன், “nurse டாக்டர் அறையில் அமருங்கள், சார் வந்து விடுவார்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். நான் கதறி அழுது கொண்டே இருதேன். அறையில் ஒரு திரை விலகியது, ஆம் ஆம் பெரியவாவே தான்!!!
அந்தஅறையில் மிக பெரிய படம் அது பெரியவா படம்! கவலைப்படத்தே நான் பாத்துக்கிறேன் என்றது! டாக்டர் பெரியவா பக்தர். டாக்டர் வந்தது ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துவிட்டு “பயப்பட வேண்டாம்! குழந்தை வளர வளர ஓட்டை அடைந்து விடும் என்றார்!”
எனது குடும்பம் கொண்டாடியது பெரியவா அருளை!!!
பிறகு குழந்தை பெயர் சூட்டும் நாள் வந்தது, நாங்கள் சுவாமிநாதன் என்ற பால பிரணவ் என்று பெயர் வைத்தோம்!!!
மீண்டும் ஒரு அற்புதம் நடந்தது!!! உண்மையில் எங்களுக்கு பெரியவா இயற்பெயர்சு வாமிநாதன் என்று தெரியாது! ஒரு வார பத்திரிகை குறிப்பை பார்த்து அகம் மகிழ்த்தோம்!!!
பெரியவா எங்களோடு இருக்கிறார்!
