எத்தனையோ தூரங்கள் மஹாபெரியவா நடந்திருக்கார். பல இடங்களில் பாதுகை இல்லாமலும் நடந்திருக்கார். பாதுகையுடனும் நடந்திருக்கார். ஆனா அவரோட கால் பாதத்தை பார்த்தா ஒரு குழந்தையோட பாதம் எப்படி மிருதுவா ரோஸ் கலர்ல இருக்குமோ அப்படி இருக்கும். அதுக்கு என்ன அர்த்தம்னா அவரோட கால் பூமியில் விழலை. பூமாதேவியை மிதிக்கக் கூடாதுன்னு சங்கல்பம் பண்ணியிருப்பார் போல. எத்தனை தூரம் நடந்தாலும் கால் வலி அப்படின்னா என்னன்னு கேட்பார். நாம ரொம்ப தூரம் நடந்தா மறுநாள் கார்த்தால எழுந்திருக்கிறச்சே வலி ஜாஸ்தியா இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவோம். ஆனா பெரியவா எதைப் பற்றியுமே கவலைப்படாம மறுபடியும் நடக்க ஆரம்பிச்சிடுவாராம்.
Mahaperiyava Malar-Padham Sharanam!
Thanks to Sri Ganesa Sarma and Sri Halasya Sundaram Iyer
