Thanks to Sri Varagoor Narayanan Mama for this rare transcript of Periyva’s conversation…Hope someone translates this….

நன்றி-கௌரி சுகுமார்.
ஸதாராவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆந்த்ராவில், பீலேரு என்ற க்ராமத்தில் ஒரு ஸ்கூல் கட்டிடத்தில் பெரியவா தங்கியிருந்தார்.
அப்போது ஒரு பக்தர் மூன்று பெரியவாளையும் ஒருசேர தர்ஶனம் பண்ணும் ஆசையில் பீலேரு வந்தார். அவர் வந்த போது பெரியவா… ஒரு தட்டி மறைவில் அமர்ந்து கொண்டு, புதுப் பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்தார்..
“த்ளாயிரத்து இருவதுகள்ள…. நாங்க காஸிக்கு யாத்ரையா.. கெளம்பினவொடனே, மடத்ல இருந்த எல்…லார்க்கும்… காஸிக்குப் போகணுன்னு ஆசை வந்துடுத்து ! காஸி ராஜாவானா… அத்தன நன்னா ஏற்பாடு பண்ணியிருந்தார்! சும்மா சொல்லப்…டாது! உபசாரங்களுக்கு கொறைவேயில்ல! ஆனா என்னாயிடுத்துன்னா…திரும்பி வரச்சே, விஶாகப்பட்ணத்ல… உக்ராண [ஸமையல்]தட்டுப்பாடு வந்துடுத்து! ஆந்த்ர ஜனங்கள்ளாம்… அங்க இருக்கற வரைக்கும், எங்களுக்கு… ஒரு கொறையும் வெக்கல! ரொம்….ப நன்னா கவனிச்சிண்டா.! ராமேஶ்வரம் வந்தப்பறந்தான்… கஷ்டதஸை ரொம்ப ஜாஸ்தியாயிடுத்து! மடத்ல இருந்த…. தங்க ஸாமானையெல்லாம் வித்தோம்! அப்போல்லாம்… ஸவரன் என்ன வெலை தெரியுமோ? பதினஞ்சு ரூவாய்க்கும் கொறைச்சல்…! ஆனா, அப்றம் தஞ்சாவூர்க்காரா எல்….லாத்தையும் மறுபடி பண்ணிக் குடுத்துட்டா..! ஆமா..! ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ண தாரா பாத்ரம் ஒண்ணு இருக்குமே? அது இருக்கோ? அது சொக்கத்தங்கம்! தெரியுமோ?….”
“பத்ரமா இருக்கு….”
பதவிஸாக, அடக்கமாக ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவாளின் குரல் ஒலித்தது.
” கும்மாணத்ல…. ராமஸ்வாமி ஶாஸ்த்ரிகளை… தெரியுமோ?….”
“தெரியுமே!….”
“அவர் இல்ல…! அவரோட பாட்டனாரைப் பத்திச் சொல்றேன்…! நம்ம….கும்மோண மடத்து சொவத்துல… [சுவர்] நோட்டீஸே ஓட்டிட்டார்! என்னன்னு… ஓட்டினார் தெரியுமா?
“…இந்த மடத்தை நம்பி… கடன் குடுத்துடாதீங்கோ! திரும்பி வராது”…ன்னு” நோட்டீஸ் ஒட்டிட்டார்!
பெரியவா… பலமாக சிரிக்கும் ஶப்தம் கேட்டது.
[பெரியவா சிரித்தாலும், இன்றும் நமக்கு இது ஒரு வெட்கக்கேடு! நாமே நம் தலையில் மண்ணையும், சேற்றையும் வாரிப் போட்டுக் கொண்டோம். மஹா அல்பமான பணத்துக்காக மஹா அரிதான பகவானை, மஹான்களை எத்தனை ஈஸியாக கீழ்மைப் படுத்திவிடுகிறோம்! பெரியவாளை நம்பினால் நமக்கு கிடைக்கும் மன அமைதியில், அழியும் இந்த பணம் காஸு எல்லாம்…வெறும்.. தூஸு போலாகும்!]“இப்போ மடத்துக்கு பேரும் புகழும் வந்திருக்குன்னா….அது என்னமோ…என்னாலதான்..ன்னு எல்லாரும் நெனைச்சிண்டிருக்கா.! வாஸ்தவத்ல… அது அப்டி இல்ல!….. எல்லாம்… ‘கலவைப் பெரியவா’ குடுத்த பாக்யம்”
[உண்மைதான்! கலவைப் பெரியவா குடுத்த மஹா மஹா பாக்யம்…..நம் பெரியவாதானே?]“எனக்கு… ஒண்ணுமே தெரியாது ! அதுவும்…பணத்தைப் பத்தி… ஶுத்தமா எதுவுமே தெரியாது! cheque, draft….இதெல்லாம்… எனக்கு பரிச்யமே… இல்ல!…. பல விஷயங்கள… எங்கிட்ட வர, பக்தாள்ட்டேர்ந்து.. துருவித் துருவி..நானே… கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். அப்டித் தெரிஞ்சிண்டத… மத்தவாகிட்ட சொல்றதால, என்னை… பெரிய்…ய “ப்ராக்ஞன்” ன்னு எல்லாரும் நெனைச்சிண்டு இருக்கா…
[பெரியவாளின் இந்த வார்த்தைகள், அவர் அமர்ந்திருக்கும் பாணி, அவர் பேசும் த்வனி இந்த மூன்றும் ஸந்தோஷமாக த்யானிப்பதற்கு மிகவும் ரஸமானவை]“….மடத்துக்கு… பணக்கஷ்டம் வரப்டாது! ஊராளாத்துப் பிள்ளைய [பால பெரியவா] அழைச்சிண்டு வந்திருக்கோம்….அவனுக்குப் பணக்கஷ்டம் தெரியாம இருக்கணும்…!.”
“ஆமா…..வெலவாஸில்லாம்… ரொம்ப ஜாஸ்தியாயிடுத்து…! ஒரு தேங்கா… அஞ்சு ரூவா விக்கறது! நம்ம மடத்துக்கு… தபால் செலவே…. வர்ஷத்துக்கு ஒரு லக்ஷத்துக்கு மேல ஆறது……”
இளைய பெரியவா கூறினார்.
“ம்ஹும்!..அத… கொறைக்காதே! வெள்ளைக்காரா….அதுலயும் “ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா” க்காரா நம்ம மதத்துக்காக எவ்ளோவ் செலவு பண்றா! எவ்ளோவ் ஒழைக்கறா !…”
“நீங்க எப்டி சொல்றேளோ… அப்டியே பண்றேன்…”
பக்தருக்கு புளகாங்கிதமானது. இரண்டு பெரியவாளின் ஸம்பாஷணையை கேட்கும் பாக்யத்தை, பெரியவாளன்றி… யாரால் அனுக்ரஹிக்க முடியும்?
நாமெல்லாம்…குடும்ப பட்ஜெட் போடுவோம். Business பண்ணுபவர்கள்…அதற்கான பட்ஜெட் போடுவார்கள். State Government, Central Government, UN என்று ஒவ்வொரு நாடும் பட்ஜெட் போடும். எத்தனை நல்ல பட்ஜெட்டாக இருந்தாலும், அது பூரணமான, நல்ல பட்ஜெட்டாக இருக்கவே முடியாது.
ஆனால்… நம் பெரியவா போடும் பட்ஜெட்டில், இந்த ஸமஸ்த ப்ரபஞ்சத்திலும் உள்ள ஸகல ஜீவராஸிகளுக்கும் பெரிய, பூர்ணமான ஆத்ம லாபம் மட்டுமே கிடைக்கும்!
compiled & penned by gowri sukumar