Sage of Kanchi

அம்பாளுக்குப் பெரியவா பண்ணின மானஸபூஜை!

Thanks to Smt Saraswathy Thyagarajan for the share…

Periyava_looking_up_BN

ஓர் பௌர்ணமியன்று திகட்டாத அனுபவம்!

மிகப் பரந்த வானவெளியில் வெண்ணிலா தங்கத்  தாம்பாளமாகச் சுடர் விடும் முழு நிலா. அம்பிகை அங்கே கொலு வீற்றிருக்கிறாள். அமுதைப் பொழியும் நிலவினிலே அம்பிகையை ஆவாஹனம் செய்து, உபசார பூஜைகள்! இரு கைகளாலும் மலர்களை எடுத்து வண்ண வண்ணமாக வெட்ட வெளியில் வீசிப்போட்ட பின் அவை மெள்ள மெள்ள இறங்கி மண்ணைத் தொட்டனவே! விண்ணுக்கும் மண்ணுக்கும் மலர் ஏணி!

பூஜை முடிந்த பின் மலர்களைத் திரட்டி எடுத்து  மார்போடு செல்லமாக அணைத்து,பக்தியுடன்
கண்களில் ஒற்றிக்கொண்ட காட்சி…என்னவென்பது!

காணப் பதினாயிரம் கண்கள் வேண்டும் காஞ்சி குரு நாதரின் பூஜையைக் காண! பெரியவாளுக்கு அம்பிகை காட்சி கொடுத்திருப்பாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ..ஆனால் எங்களுக்கு பெரியவாதான் கண்களுக்கு விருந்தாக அமுதமாகத் தெரிந்தார்!

சொல்வது பூனா சுந்தா அவர்கள்!

எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி சுந்தா அவர்கள்!

Exit mobile version